அம்னோவின் தேர்தல் பின்னடைவுகளுக்கு மகாதிரே காரணம்: பேராளர் சாடல்

alvi1990-இலும்  2008-இலும்  அம்னோ  தேர்தலில்  அடைந்த   தோல்விகளுக்கு முன்னாள் பிரதமர்  மகாதிர்  முகம்மட்தான்  காரணம்  என  அம்னோ  பொதுப்  பேரவையில்  பேராளர்  ஒருவர்  சாடினார்.

1990  தேர்தலில்  அம்னோ  கிளந்தானை பாஸிடம்  இழந்தது. இதற்கு  மூன்றாண்டுகளுக்கு  முன்பு  மகாதிருக்கும்  தெங்கு  ரசாலி  ஹம்சாவுக்குமிடையில்  ஏற்பட்ட  தகராறே  காரணம்  என  முகம்மட்  அல்வி சே  மாட்  கூறினார்.

“முடிவில்  அம்னோ  சட்டவிரோத  அமைப்பாக  அறிவிக்கப்பட்டது. அதனால்  கிளந்தான்  அம்னோதான்  கடுமையாக  பாதிக்கப்பட்டது.

“பெருந்  தலைவர்கள்  இருவர்  அடித்துக்  கொண்டதால்  1990  தேர்தலில்  அது  ஒரு  இடத்தைக்கூட  வெற்றிகொள்ள  முடியவில்லை”, என  அம்னோ  தலைவர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  கொள்கைமீதான  விவாதத்தின்போது  அல்வி  குறிப்பிட்டார்.

2008-இல்,  மகாதிர்  அப்போதைய  கட்சித்  தலைவர்  அப்துல்லா  அஹ்மட்  படாவியைக் கடுமையாக  தாக்கிப்  பேசி  வந்ததால் ஆளும்  கட்சி  அதன்  மூன்றுக்கு இரண்டு பங்கு  பெரும்பான்மையை  இழந்தது  என்று  அவர்  சொன்னார்.