ஐஜிபி: மகாதிர் மீதான விசாரணை விரைவில் முடிவு பெறும்

igppபோலீஸார்  ஆகஸ்ட்  மாதம்  பெர்சே 4 பேரணியின்போது  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  தெரிவித்த  கருத்துகள்மீதான  விசாரணையை  விரைவில்  முடிந்துக்  கொள்வார்கள்  என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

“விசாரணை  ஆவணங்களை  இற்றைப்படுத்தி  வருகிறோம். சட்டத்துறைத்  தலைவருடனும்  விவாதித்து  வருகிறோம். விரைவில்  அது  முடிவுறும்”, எனப்  போலீஸ்  படைத்  தலைவர்   காலிட்  அபு  பக்கார்  தெரிவித்தார்.

அம்னோ  அடிநிலைத்  தலைவர்கள்  கையூட்டு  பெற்றார்கள்  என்று  மகாதிர்  கூறியதன்  தொடர்பில்  அவர்மீது  பல  போலீஸ்  புகார்கள்  செய்யப்பட்டன.

இதன்  தொடர்பில்,  போலீசார்  கடந்த  மாதம்  முன்னாள்  பிரதமரிடம்  வாக்குமூலமும்  பதிவு  செய்தனர்.