பிரதமருக்கு எதிரான மகாதிரின் சதித்திட்டக்கு கோடீஸ்வரர்கள் பண உதவியா? போலீஸ் ஆராய்கிறது

probeபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைக்  கவிழ்க்கும்  சதித்  திட்டத்துக்குப்  பிரபலமான தொழில்  அதிபர்கள்  சிலர் பண  உதவி  செய்ததாகக்  கூறும்  மலேசியா டுடே கட்டுரையை  போலீசார்  ஆராய்ந்து வருகின்றனர்.

அத்  தொழில்  அதிபர்கள்  டாக்டர்  மகாதிரையும்  முன்னாள்  நிதி  அமைச்சர்  டயிம்  சைனுடினையும்  லண்டனில்  சந்தித்துப்  பேசினார்களாம்.

அக்கட்டுரை  முக்கிய  பிரமுகர்கள்  மீது  கடுமையான  குற்றச்சாட்டுகளைச்  சுமத்தி  இருக்கிறது  என  போலீஸ்  படைத் தலைவர்  காலிட்  அபு  பக்கார்  கூறினார்.

“கட்டுரையாளருக்கு  எப்படி  தகவல் கிடைத்தது  என்பதை  ஆராய்வோம்.

“அக்குற்றச்சாட்டுகள்   முக்கிய  பிரமுகர்களைக்  களங்கப்படுத்துவதுடன்  அரசாங்கத்தைக்  கீழறுக்கும்  சதி  நடப்பதாகவும்  தெரிவிக்கிறது”, என்று  காலிட்  கூறினார்.

மகாதிரும்  டயிமும்  அம்னோ, மசீச, மஇகா, டிஏபி  ஆகிய  கட்சிகளைச்  சேர்ந்த  40  எம்பிகளை,  “விலைக்கு  வாங்க”  முயன்றதாகவும்  அக்கட்டுரை  கூறியது. ஆளுக்கு  ரிம10 மில்லியன்  கொடுக்க  முன்வந்தார்களாம்.