பிஏசி விசாரணையில் ஊடகங்களுக்கு இடமில்லை

pacbஇன்று  பொதுக் கணக்குக்குழு(பிஏசி) 1எம்டிபி  தலைவர்  அருள் கந்தாவிடம்  விசாரணை  நடத்தப்போவதாகக்  கூறப்பட்டிருந்ததால் விசாரணைக்குச் சென்று  செய்தி  சேகரிப்பதற்காக  நாடாளுமன்றத்துக்குள்  நுழைய  முயன்ற  செய்தியாளர்கள்  வாசலிலேயே  தடுத்து  நிறுத்தப்பட்டனர்.

அங்கிருந்த  போலீசார்  இன்று  ஊடகங்களுக்கு  அனுமதி  இல்லை  என்றனர்.

“இது  மேலிட  உத்தரவு. காரணம்  தெரியவில்லை”, என்று  கூறி  விட்டனர்.

வேறு வழியில்லாமல்  ஊடகவியலாளர்கள்  நாடாளுமன்றத்துக்கு  வெளியில்  கார்களை  நிறுத்தி  வைத்து விட்டு  கொளுத்தும்  வெய்யில் காத்து  நின்றார்கள்.

பிஏசி,  அருள் கந்தாவை  விசாரிப்பது  இது இரண்டாவது  தடவையாகும்.  இதற்குமுன்  டிசம்பர்  1-இல் அவரிடம் ஐந்து  மணி  நேரம்  துருவித்  துருவி  விசாரித்தது.