காடழிப்பே குரங்கு மலேரியா பரவலுக்குக் காரணமாம்

malariaமலேசியாவில்  காடழிப்பு  வேலைகளாலும்  அதனால்  சுற்றுச் சூழலுக்கு  ஏற்படும்  மாற்றங்களாலும்தான்  குரங்குகளுக்கு  வரும்  மலேரியா  நோய்  இப்பொது மனிதர்களிலும்  அதிகம்  காணப்படுவதாக   லண்டனில்  அறிவியலாளர்கள்  தெரிவித்துள்ளனர்.

கொசுக்களால்  பரப்பப்படும்  asmodium knowlesi malaria என்னும்  இந்நோய்  காடுகளில்  வாழும்  மஹாக்  வகை  குரங்குகளில்தான்  வழக்கமாகக்  காணப்படும். அண்மையில்  இது  மக்களிடமும்  காணப்பட்டது.

காடுகள்  பரவலாக  அழிக்கப்படுவதாலும்  விவசாயத்தின்  விரைவான  விரிவாக்கத்தாலும் இந்த வகை  மலேரியா  இப்போது  மலேசியாவில்  பல  இடங்களில்  மனிதர்களிலும்  சாதாரணமாகக்  காணப்படுகிறது. தென்கிழக்காசியாவியாலும்  இது  பரவலாகக்  காணப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.