1எம்டிபி மீதான ஏஜியின் இறுதி அறிக்கை பிப்ரவரியில்தான் தயாராகும்

repபொதுக் கணக்குக்குழு(பிஏசி)வில்  தாக்கல்  செய்யப்பட  வேண்டிய  தலைமைக்  கணக்காய்வாளரின் (ஏஜி) 1எம்டிபி  மீதான  அறிக்கை  அடுத்த  ஆண்டு  பிப்ரவரி  மாதத்தில்தான்  தயாராகுமாம்.

பிஏசி  உறுப்பினர்களில்  ஒருவரான  டோனி  புவா  இன்று  இதை  நாடாளுமன்றத்துக்கு  வெளியில்  தெரிவித்தார்.

ஏஜி-க்கு  இன்னும்  சில  ஆவணங்கள்  வந்து  சேராததே தாமதத்துக்குக்  காரணமாம்.

“தேசிய  கணக்காய்வுத்  துறைக்கு  இப்போதுதான்  சில  ஆவணங்கள்  கிடைத்ததாகவும்   கொடுக்கப்படும்  என்று  சொல்லப்பட்ட  வேறு  சில  ஆவணங்கள்  இன்னும்  வந்து  சேரவில்லை  என்றும்  எங்களிடம்  தெரிவிக்கப்பட்டது”, என்று  புவா  தெரிவித்தார்.

எந்தெந்த  ஆவணங்கள்  வந்து  கிடைக்கவில்லை  என்பது  பிஏசியிடம்  தெரிவிக்கப்படவில்லை.