அன்னிய மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள நான்கு தனியார் உயர்க் கல்விக் கழகங்களுக்கு இடைக்காலத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக உயர்க் கல்வி அமைச்சர் இட்ரிஸ் ஜூசோ இன்று அறிவித்தார்.
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மாணவர் விசாக்களைப் பயன்படுத்திக்கொண்டு நாட்டுக்குள் வந்து விடுவது கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில, ‘விசா கல்லூரிகள்’ என்றே அழைக்கப்படுகின்றன.
நாட்டில் உள்ள எல்லா தனியார் பல்கலைக்கழகங்களையும் கல்லூரிகளையும் சோதனையிட்டுப் பார்த்தப்பின்னர் அவற்றில் நான்குக்கு மட்டும் புதிதாக வெளிநாட்டு மாணவர்களைச் சேர்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.


























நேற்று பெய்த மழையினில் பூத்த காளான்கள் போல் தெருவுக்கு ஒரு காலேஜும் பல்கலைக்கழகமும் தோற்றுவித்து ஆதாயம் தேடும் அரசாங்க கல்வி கொள்கையின் விளைவே இந்த கன்றாவி நிலை!!! கல்வித்தரத்தை முதன்மையாக கொள்ளாமல், தமது வருமானத்தையே (பாக்கட்டையே) குறிக்கோளாகக் கொண்டு கல்வியை வியாபாரம் செய்ததின் எதிரொலியே இந்த கேவல நிலை!!!
Nottingham University UK , Malaysia campus , வெறும் பத்து விழுக்காடு எடுத்து கொண்டு , மீதம் 90% விழுக்காடு உள் நாட்டு நிறுவனகள் ஆதாயம் செய்கின்றன . இதை சொடுக்கவும்
https://www.timeshighereducation.com/news/tribunal-says-nottingham-ran-franchise/310368.article
இந்த நான்கு கல்விக் கழகங்களும் சேர்த்துக் கொண்ட மாணவர்கள் கிறிஸ்துவர்களாக இருக்கலாம். இல்லாவிட்டால் நீங்கள் ஏன் நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்!
சில மசாலா தொழிற்சாலைகளும் வெளிநாட்டு தொழிலாளர்களை தவறாக பயன் படுத்துகிறார்கள் .கிலங் வேலைக்கு வந்த வர்களை salesman வேலைக்கு அனுப்புகிறார்கள் imigeresen.நடவடிக்கை எடுக்க வேண்டும் .
abraham அவர்களுக்கு எப்போதும் கிறிஸ்துவர்களை பத்தி கவலைதான் ….மொட்டைதலைக்கும் முட்டிகாலுகும் முடிச்சி போடுகிறார் …