நீலாய் தமிழ்ப்பள்ளிக்கு தீ வைக்கப்பட்டதா?

fireஇன்று  அதிகாலை  மணி  2.25 அளவில்  நீலாய் தேசா  செம்பாகா  தேசிய  வகை  தமிழ்ப்  பள்ளியின்  கீழ்த்  தளத்தில்   தீ  பற்றிக் கொண்டது.  அதில்  மூன்று  வகுப்பறைகளின்  கூரை,  கதவுகள்,  சன்னல்கள்,  கோப்புகள்,  நூல்கள்  முதலியவை  எரிந்து  போயின.

நீலாய்  தீ அணைப்புப் படையினர்  10  நிமிடத்தில்  தீயை  அணைத்தனர்.

தீ  விபத்துக்கான  காரணத்தைக்  கண்டறிய முயல்வதாக  நெகிரி  செம்பிலான்  தீ அணைப்பு  மற்றும் மீட்புத்  துறை உதவி  இயக்குனர்  அஹ்மட்  முக்லிஸ்  முக்தார்  கூறினார். அது  ஒரு  சதிநாச  வேலையாக  இருக்கலாம்  என்றும்  அவர்  சந்தேகிக்கிறார்.