பயங்கரவாத- தொடர்புள்ள பொருள்களை வைத்திருந்ததாக இந்தோனேசியர்மீது குற்றச்சாட்டு

indonபயங்கவாதத்துடன்  தொடர்புள்ள  பொருள்களை  வைத்திருந்ததற்காக இம்மாதத்  தொடக்கத்தில்  கைது  செய்யப்பட்ட  31-வயது இந்தோனேசியர்  இன்று  நீதிமன்றத்தில்  நிறுத்தப்பட்டார்.

அவர்மீதான  குற்றப்  பத்திரிகையை  அரசுத்தரப்பு  வழக்குரைஞர்  சுஹாய்லி  சாபுன்  வாசித்தார்.

ஈசான்  என்ற  அந்த  இந்தோனேசியரின்  கைபேசியில்  ஐஎஸ்  இஸ்லாமிய  தீவிரவாதிகள்  பற்றிய  196  படங்களும்  200  காணொளிக்  காட்சிகளும்  இருந்தனவாம்.

அவர்  குற்றச்சாட்டை  ஏற்கவுமில்லை, மறுக்கவுமில்லை. அவர்மீதான  வழக்கு 2016, ஜனவரி  28-ல்   மீண்டும்  விசாரணைக்கு  வரும்.