பிகேஆர் சரவாக்கில் இருக்கப்போவது உறுதி: சரவாக் சிஎம்-முக்கு அஸ்மின் பதிலடி

azmபிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி தன் கட்சி சரவாக்கில் தொடர்ந்து இருப்பது உறுதி என்பதை வலியுறுத்தினார்.

மேற்கு   மலேசியக்   கட்சிகள்   சரவாக்கில்   தலையிடுவதை   சரவாக்   முதலமைச்சர்    அடினான்  சாத்தேம்   கண்டிருப்பது   பற்றிக் கருத்துரைத்தபோது   அஸ்மின்    இவ்வாறு   குறிப்பிட்டார்.

பிகேஆர்   ஒரு   தேசியக்   கட்சி.    அதற்கு  சரவாக் தேர்தல்களில்    பங்கேற்கும்   பொறுப்பு    உண்டு    என்று   சிலாங்கூர்    மந்திரி   புசாருமான அஸ்மின்   அலி    கூறினார்.

“இது ஒன்றும்    புதிதல்ல.   தொடக்கத்திலிருந்தே   சரவாக   மாநிலத் தேர்தல்களில்    கலந்துகொண்டு வந்திருக்கிறோம்.

“அங்கு   இருக்கிறோம்,   தொடர்ந்து இருப்போம்”,   என்பதை  வலியுறுத்திய    அஸ்மின்   பிகேஆர்    அங்கு   சில   இடங்களை வென்றிருப்பதையும்   சுட்டிக் காட்டினார்.

மார்ச் மாதம் நடைபெறலாம்   என்று   கூறப்பட்டுள்ள   மாநிலத்   தேர்தலுக்கான   ஆயத்தங்கள்   பற்றியும்   அவர்   குறிப்பிட்டார்.

“நெடுங் காலமாக   தயாராகி வந்துள்ளோம்.. அந்த நாளுக்காகக் காத்திருக்கிறோம்”, என்றார்.