உங்கள் கருத்து: ‘50 ஆண்டுகளுக்குப் பிறகும் சிவில் சட்டத்தின் எல்லை எது, ஷியாரியா சட்டத்தின் எல்லை எது என்பது தெரியாமலேயே இருக்கிறது’
நெகாராவான்: மலேசியா ஒரு தோல்விகண்ட நாடு என்பதற்கு இது மற்றுமொரு எடுத்துக்காட்டு. 50 ஆண்டுகளுக்குப் பின்னரும் சட்டம் இன்னும் சீர்குலைந்துதான் கிடக்கிறது. சிவில் சட்டத்தின் எல்லை எது ஷியாரியா சட்டத்தின் எல்லை எது என்பது தெரியாமலேயே இருக்கிறது.
இதைத்தான் சந்தர்ப்பவாத முஸ்லிம்கள் முஸ்லிம்- அல்லாதாருக்கு எதிராக சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இரண்டு வகை நீதிமுறைகள் இருப்பதில் தவறில்லை. ஆனால், ஏற்படக்கூடிய, ஏற்பட்டிருக்கும் அநீதியைக் களைவதற்குத் தேவையான அரசியல் துணிச்சல் இல்லாமலிருப்பதுதான் தவறு.
சிங்கப்பூரிலும் இரட்டை நீதிமுறைகள்தான். ஆனால், இங்குள்ள சட்டப் பிரச்னைகள் அங்கு இல்லை. ஏனென்றால் சிவில், ஷியாரியா சட்டங்களின் அதிகார வரம்புகளை சிங்கப்பூர் அரசாங்கம் வரையறுத்து வைத்துள்ளது.
த ஸ்டார் நாளேட்டில் ஜைட் இப்ராகிம் அழகாகக் குறிப்பிட்டிருக்கிறார் நீதித்துறையும் சட்டத்தை உருவாக்குவோரும் ஆன்மாவையும் மனிதாபிமானத்தையும் இழந்து விட்டார்கள் என்று.
உலக நீதி: இஸ்லாமிய சட்டத்தை முஸ்லிம்- அல்லாதாரிடம் பயன்படுத்துவது இஸ்லாத்துக்கு முரணாகும்.
மலேசிய உணர்வு: நடப்பதைக் கண்டு முஸ்லிம்- அல்லாதார் கவலை கொண்டிருப்பார்கள். அரசமைப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ள “சட்ட ஆளுமை”யை வழக்கமாக நிலைநிறுத்திவரும் சிவில் நீதிமன்றங்கள் நிலை தடுமாறிப் போயுள்ளன.
ஷியாரியா சட்டம் முஸ்லிம்- அல்லாதாருக்குப் பொருந்தாது என்று கூறப்பட்டு வந்தது உண்மை அல்ல என்று நிறுவப்பட்டு விட்டது. எனவே, ஹுடுட் சட்டம் முஸ்லிம்- அல்லாதார்மீது வலிய பயன்படுத்தப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?
செம்பருத்தி பூ: தாயார் குழந்தைகளைக் கொடுமைப்படுத்துபவராக அல்லது மூளைக் கோளாறு உள்ளவராக இருந்தால் தவிர, அவரின் குழந்தைகளைப் பராமரிக்கு உரிமையை அவருக்குக் கொடுக்க மறுப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
தீர்ப்பு விளங்கவில்லை. குழந்தைகள்மீது தனக்குள்ள உரிமை தெரியாமல் தாயைத் திரிசங்கு நிலையில் தவிக்க விடுவது அடுக்காது. இது மகாக் கொடுமை.
ஒடின்: இப்பிரச்னைக்குக் காரணங்கள் இரண்டு என்பது என் கருத்து. ஒன்று, முஸ்லிம் நீதிபதிகள் முஸ்லிம்- அல்லாத ஒருவரின் ஒருவருக்குச் சாதகமாக முடிவெடுக்க விருப்பமில்லாதது. இன்னொன்று, பெற்றோர் என்பதை மலாயில் “தாய் அல்லது தந்தை” என மொழி பெயர்த்திருப்பது.
ஓ யா?: “கடுமையான சட்டங்களையும் இதயமற்ற நீதிபதிகளையும் உருவாக்கவா இப்படிப்பட்ட நாடாக உருவாகியுள்ளோம்?”, என ஜைட் இப்ராகிம் சரியாகவே சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டங்களைத் திருத்த வேண்டும். நீதிபதிகளின் நியமனத்தையும்தான். பொறுப்பு ஆளும் வர்க்கத்துக்கு மட்டுமல்ல.. எதிரணிக்கும் சிவில் சமுதாயத்துக்கும் உண்டு. அனைவரும் அரசியல் வேறுபாடுகளை மறந்து நீண்ட காலமாக இழுத்துக்கொண்டு போகும் இப்பிரச்னைக்கு முடிவு காண வேண்டும்.
ஷானொண்டோவா: இந்திய சமூகத்தைக் காக்க மஇகா அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும். அவர்கள் ஏற்கனவே அவர்களின் உரிமைகள் பலவற்றை இழந்து விட்டார்கள். இப்போது நீதியின் பெயரால் அவர்களின் பிள்ளைகளும் தாய்மார்களிடமிருந்து பிரித்துக் கொண்டு சொல்லப்படுகிறார்கள்.
விஷு: இந்திரா காந்திக்கு நீதிமன்றங்களில் சாதகமாக எதையும் எதிர்பார்க்க முடியாது. அரசாங்கம் உள்பட எல்லாமே மாற வேண்டும்
இன்று சில தமிழ் பத்திரிகைகள் படிதிருப்பிர்கள் . இந்த விசியத்தில் நமது ம் இ க அரசியல் தலைவர்கள் 9 வருடமாக உறங்கி விட்ர்கள் இன்று அதிகமாக பேசும் தலைவர்கள் ஒரு வழக்கரிஞ்சரை இந்த வழக்குக்கு ஏற்ப்பாடு செய்ய முடிந்ததா முன்னால் கனவானல் l கடன் காரனாகிய .இந்திர காந்திக்கு எதாவுது பணம் அல்லது தெகுன் கடன் வாங்க எந்த உதவி செய்ய முடியவில்லை .. .நாடகம் ஆடும் உங்கள் மகளிர் தலைவி மோகனாவுக்கு இந்த துன்ப படும் இந்திரா காந்தியை பார்த்து ஆதரவு கூட சொல்ல முடியவில்லை. இப்பொழுது ஆவது சமுதாய பிறச்சனைக்கு வே ளை செயுங்கள்
நாட்டில் உண்மையான நீதி நிலை பெற, சமய வெறியர்களையும் நயவஞ்சகர்களையும் அல்லது அதற்கு உடன்பாடாக செயல்படும் அயோக்கியர்களையும் வேருடன் கலை பிடுங்க வேண்டும். நீதி செத்த மண் ஒருகாலும் நிலை கொள்ளா!!!!
சகோதரி இந்திராவுக்கு ஆதரவாக அரசு சார்பற்ற இயக்கங்கள், இந்திய அரசியல்வாதிகள், ஆளும் அரசில் உள்ள ம இ கா தலைவர்களை முன்னோடியாகக் கொண்டு எதிர்ப்பு மகஜர் ஒன்றினை வெகு விரைவில் அமைச்சரவையின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்!! என்னதான் நடக்கிறது என்று மக்கள் தெளிவாக தெரிந்துகொள்ளட்டும்!!! நம்பி இழந்ததும் ஏமார்ந்ததும் போதுமடா!!!!
இ..ம் சமயம் எல்லா சமயத்தவர்களையும் நேர்மையுடனும் நியாத்துடனும் நடத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இல்லையேல் மற்ற இனத்தவர்களின் சாபத்திர்க்குள்ளாக நேரிடும்.
இவனை போன்று இம் மாதிரி ஒரு சிலர் பாதிக்கபட்டு இருப்பார்கள் அதில் நானும் ஒருவன் வேலை நிமிதமாக கிளந்தான், குவந்தான், மாநிலத்தில் சுமார் 5 வருடம் மனைவி குழந்தைகளுடன் வேலை செய்ய வேண்டி இருந்தது. எவ்வளவோ நமது முஸ்லிம் நண்பர்கள் என்னை இஸ்லாம் மதத்தில் சேரும்படி சொன்னார்கள் நானும் குடும்பத்திற்கு தெரியாமல் அவர்களுடன் பழகிவந்தேன். என் முஸ்லிம் நண்பர்களும் என்னை மதத்தில் சேரும்படி சொன்னார்களே தவிர என்னை ஒரு நாளும் வற்புறுதாவில்லை. அப்படி செய்யவும் மாட்டார்கள் அனால் அவர்கள் முஸ்லிம் மீது அதிகம் பற்று வைத்து இருந்தார்கள். நானும் சில சமயங்களில் முஸ்லிம் புத்தங்களை படிதேன். ஈற்பு இருந்தது படிப்பதற்கு அனால் முஸ்லிம் மதத்தில் சேருவதற்கு மனம் இடம் கொடுக்கவில்லை. காரணம் மனைவி பிள்ளைகள் மீது அதிகம்மாக நமது பாசம் உள்ளத்தால் அப்படி ஒரு முடிவுக்கு போகவில்லை . நமது இஸ்லாம் மதமும், ருக்குன் நெகாராவும் யாரையும் கட்டாய படுத்தவில்லை. ஒரு சிலர் சந்தர்ப்பவாத மனிதர்கள் செய்யும் தவறு ஒரு குடும்பமே சட்டத்தின் முன்பு நிற்க உள்ளது. இதில் சகோதரி இந்திராவுக்கு எனது அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன். நிச்சயம் வெற்றி பெறுவார் ஒரு நாளில். ஆண்டவன் நிச்சயம் கை விடமாட்டார்.
நான் பல தடவை சொல்லிவிட்டேன்- நமக்கு நீதி கிடைக்காது– நம் துரோகிகளை களை எடுத்தால் தான் நமக்கு விடிவு. ……… அம்னோ குஞ்சு நீதிபதிகளிடமிருந்து மருந்துக்கு கூட நீதி கிடைக்காது– MIC – MCA கம்மனாட்டிகள் சப்பிகொண்டு இருக்கும் போது ஒன்றும் நடக்காது.
திரு மோகன் அவர்களே ஒரு நல்ல முஸ்லிம் மற்றவர்கலை மத மற்ற மற்றும் துன்ப படுவதை விரும்ப மாட்டன் அனால் நம் நாட்டில் ஒருசில முஸ்லிம் மத வெரி பிடித்த மனிதர்கள் இந்து குடும்பங்கள் கொடுமை படுதுவது அவர்களுக்கு சந்தோசமாக இருக்கிறது.இதனால் அவரகள் இஸ்லாம் மதத்தை தானாகவே இழிவு படுத்தி கொள்ளுகிறார்கள்
,
இ..ம் என்ற வார்த்தை கேட்டாலே இன்று உலக மக்கள் முகம் சுளிப்பதை உணராத பாவப்பட்ட ஜென்மங்கள்