டிஏபி மலாய் வேட்பாளர்களைக் களம் இறக்குவதில் கவனம் தேவை

amanahடிஏபி  ஜோகூர்  சட்டமன்ற  இடங்களுக்கு  மாலாய்க்கார  வேட்பாளர்களைக்  களம்  இறக்குவதில்  கவனத்துடன்  செயல்பட  வேண்டும்  என  ஜோகூர்  அமானா  பேராளர்  ஒருவர்  எச்சரித்துள்ளார்.

டிஏபி  மலாய்க்காரர்களுக்கு  எதிரி,  இஸ்லாத்துக்கு  எதிரி  என்று  சொல்லிச்  சொல்லியே  அம்னோ  ஜோகூர்  புறநகர்  மலாய்க்காரர்களை  நம்ப  வைத்துள்ளது  என  ஜோகூர்  அமானா  துணைத்  தலைவர்  சுல்கிப்ளி  அஹமட்  கூறினார்.

“ஜோகூரில்  சீன  நண்பர்களின்  ஆதரவு  உண்டு. அது  பற்றிக்  கவலை  இல்லை. ஆனால்,  மலாய்  வாக்காளர்கள்  பற்றித்தான்  கவலை.

“ஆகவே,  டிஏபி  நடைமுறைக்குத்  தக்கபடி நடந்து  கொள்ள  வேண்டும். நாடாளுமன்றத்  தொகுதிகளுக்கு  வேண்டுமானால்  மலாய்  வேட்பாளர்களை  நிறுத்தலாம்.  சட்டமன்றத்  தொகுதிகளில்  வேண்டாம்.

“அப்படியே  நிறுத்துவதாக  இருந்தால்  பிகேஆர்  அல்லது  அமானா   சின்னங்களில் அவர்களைக்  களமிறக்கலாம்”, என  ஷா ஆலம்  பக்கத்தான்  ஹராபான்  உச்சநிலை  மாநாட்டில்  சுல்கிப்ளி  கூறினார்.