தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மலேசியர்கள்தான் என்பது உறுதியாக தெரியவில்லை

suicideஈராக்கிலும்  சீரியாவிலும் 30 பேர்  கொல்லப்படுவதற்குக்  காரணமாக  இருந்த  ஐஎஸ் தற்கொலைப்  படையைச்  சேர்ந்த  இருவர்    மலேசியர்கள்தான் என்பது இன்னும் உறுதியாகவில்லை என்றும்  அது உறுதிப்படுத்தப்படுவதற்காகக்  காத்திருப்பதாகவும்  இன்ஸ்பெக்டர்- ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட் அபு பக்கர் தெரிவித்தார்.

அவர்கள்  போலியான மலேசிய அடையாள  ஆவணங்களைப் பயன்படுத்தியிருக்கலாம்  என்றாரவர்.

“அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காகக் காத்திருப்போம். அவர்கள்  மலேசியர்கள்  என்று  கூறப்பட்டிருந்தாலும்  நிச்சயமாக  சொல்வதற்கில்லை” என்றவர்  சொன்னார்.

நேற்று   த  நியு  ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸ்  இரண்டு  மலேசியர்கள்  சீரியாவிலும்  ஈராக்கிலும்  தனித்தனியே  மேற்கொண்ட  தற்கொலைக்  குண்டுவெடிப்புத்  தாக்குதலில்  சுமார்  30  பேர்  பலியானதாக  செய்தி  வெளியிட்டிருந்தது.