இந்திரா வழக்கு பற்றிப் பதிவிட்டிருந்த ஜைட்டிடம் போலீஸ் விசாரணை

qquizதம்  வலைப்பதிவில் ‘இந்திராவே, உங்களுக்காக  என் இதயம் அழுகிறது’ என்ற  கட்டுரைப்  பதிவிட்டிருந்த  முன்னாள்  அமைச்சர்  ஜைட்  இப்ராகிமை  போலீசார்  இன்று  விசாரித்தனர்.

தேச  நிந்தனைச்  சட்டம்  பிரிவு 4(1) (சி)-இன்கீழ்  அவர்  விசாரிக்கப்பட்டார்.

டாங்  வாங்கி  மாவட்ட  போலீஸ்  தலைமையகத்தில்  சுமார்  இரண்டு  மணி  நேரம்  அவர்  விசாரிக்கப்பட்டார்.

“நான் அப்படி  எழுதியதால்  சிலர்  எரிச்சலடைந்திருக்கிறார்கள். என்  நடவடிக்கைகள்,   (இந்திரா  காந்தி) வழக்கில்  என்னுடைய  நிலைப்பாடு, என்னுடைய  வலைப்பதிவு  பற்றியெல்லாம்  விசாரித்தார்கள்”, என  ஜைட்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.