அரசியல் ஆர்வலர் ஹிஷாமுடின் ரயிஸுக்கு தேச நிந்தனைக் குற்றச்சாட்டுக்காக கூடுதல் தண்டனை விதிக்க வேண்டும் என்ற அரசுத்தரப்பு முறையீட்டை ஏற்று உயர் நீதிமன்றம் 9 மாதச் சிறைத் தண்டனை விதித்தது.
ஆனாலும், மேல்முறையீடு செய்வதற்கு இடமளித்து தண்டனையை நீதிபதி நிறுத்தி வைத்து ஹிஷாமுடினை ரிம6,000 பிணையில் விடுவித்தார்.
முன்பு செஷன்ஸ் நீதிமன்றம் இதே குற்றத்துக்கு ரிம5,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்திருந்தது. அவர் அபராதத் தொகையைச் செலுத்தி இருந்தார்.
இன்றைய தீர்ப்பில் உயர் நீதிமன்ற நீதிபதி நோர்டின் ஹசான், பொதுத் தேர்தல் முடிவுகளை நிராகரித்து தெருக்களில் ஆர்ப்பாட்டம் செய்யுமாறு ஹிஷாமுடின் மக்களைக் கேட்டுக்கொண்டது “மிகக் கடுமையான குற்றம்” என்றார்.
அதன் காரணமாகவே ஹிஷாமுடினின் தண்டனையைக் கூட்ட வேண்டுமென்ற அரசுத்தரப்பு கோரிக்கையை ஏற்பதாகவும் கூறினார்.


























ஹிஷாமுடின் ராயிஸ் நல்ல போராட்டவாதி. ஆனால் அரசை கவிழ்த்து, தானே ராஜாவாகி விட வேண்டும் என பயங்கர குற்றம் புரிந்துவிட்டார். சிறிய குற்றங்களான கொலை செய்வது [அமைச்சர் மொக்தார் ஹாஷிம் 22-4-1982ல் அன்றைய நெகெரி சபாநாயகர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டார்] போன்றவற்றை செய்திருந்தால், இன்று அவரை போன்று ‘வெளியே’ சுற்றிக் கொண்டிருக்கலாம். அல்லது, யாரையாவது வெடி வைத்து தகர்த்திருந்தால், அரசாங்கம், அவரை பாதுகாப்பாக ஆஸ்திரேலியா அனுப்பி வைத்திருக்கும். பிழைக்கத் தெரியாத கபோதி, ஹிஷாமுடின் ராயிஸ்.
உண்மைதான் சிங்கம் IS க்கு அதரவு கொடுப்பவன் நம்ம b.. um..vum P..S SUMTHAAN அவனுங்களை நம்ம அரசாங்கம் ராஜா மரியாதையோடு …..வரவேட்கிறது