சில என்ஜிஓ-கள் ஒன்றுசேர்ந்து உணவு தேவைப்படும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவும் திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளன.
இதன் பொருட்டு Gabungan Kami Sayang Mahasiswa (Kasih) என்னும் அமைப்பை அவை நிறுவியுள்ளன. அந்த அமைப்பின் வழி கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள பல்கலைக்கழகங்களில் உணவு தேவைப்படும் மாணவர்களுக்கு முறையாக உணவு வழங்கப்படும்.
“எங்களால் மாணவர்களின் சிரமத்தைக் குறைப்பதற்குப் பக்கத் துணையாக மட்டுமே இருக்க முடியும்.
“அரசாங்கம்தான் இப்பிரச்னையைத் தீர்க்கக் கூடுதல் பொறுப்பேற்க
வேண்டும். அதற்குப் பல்கலைக்கழகங்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்”, என காசே அமைப்பின் தலைவர் மரியம் அப்துல் ரஷிட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


























கடந்த மூன்று வருடமாக உயர்கல்வி பயிலும் எனது மூன்று பிள்ளைகளில் , யாராவது ஒருவராகிலும் வாரத்தில் ஒரு முறையாவது
” அப்பா ……..நாங்கள் நேற்று இரவு சாப்பிடவில்லை ,இன்று காலை பசியாரவோ , பணம் போதவில்லை ” என்று கைபேசியில் அழைத்து சொல்லும் போது என் மனம் படும் பாட்டை போல் இன்னும் எத்தனை தந்தைகளும் தாய்மார்களும் படுகிறார்களோ என்று நினைக்கும் பொழுது உள்ளம் கனக்கத்தான் செய்கிறது ! இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது என்று எண்ணியதால் மானம் கெட்ட பொலப்பாக ஒரு அரசியல் வாதியிடம் உதவி கேற்க போய் நான் பட்ட அவமானத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன் . ;
ஒரே வருடத்தில் எனது மூன்று பிள்ளைகளுக்கும் உயர் கல்வி கற்றிட அரசாங்க பல்கலைகலகதிளிருந்தும் மற்றும் தனியார் உயர்கல்விகூடதிளிருந்தும் அழைப்பு வந்திருந்தது ! இப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்ப்பது அபூர்வம் , அதனால் எப்பாடுபட்டாவது மூன்று பிள்ளைகளையும் உயர் கல்வி படிக்க அனுப்பி வைக்க சபதம் கொண்டேன் . இதனால் எத்தனை சிறுமைகளை அனுபவித்தாலும் பரவாயில்லை என்ற என்ற மன உறுதியோடு டத்தோ சரவணன் அவர்களிடம் இதுபற்றிய ஆலோசனைகளையோ அல்லது உதவியோ கிடைக்குமா ? என்ற நோக்கத்தில் அவரின் கைபேசியோடு தொடர்பு கொண்டேன் . நான் பிறந்து வாழ்ந்த ஊரான தாப்பா , பேராக் தொகுதியின் நாடாளுமன்ற செயலாளர்தான் இந்த டத்தோ சரவணன் . பலநாள் கைபேசி வழியாக தொடர்பு கொண்டும் என் முயற்சி பலன் தராமல் போனது . சிறிதும் மனம் தளராமல் அவரின் சொந்த அறவாரியமான “நாம் அறவாரியம் ” அலுவலகத்திற்கு மகனையும் அழைத்து சென்றேன் . நாங்கள் அந்த அலுவலகம் உள்ளே செல்லும் முன்பே டத்தோ சரவணன் அவர்கள் சில பிரமுகர்களுடன் வரவேற்பறையில் அமர்ந்து உரையாடிகொண்டிருப்பதை இருவரும் கண்டோம் ! அதன் பிறகு அவர் அலுவலகம் சென்று அவருடைய காரியதரிசியான ஒரு பெண்ணிடம் வந்த நோக்கத்தை சொன்னோம் . அந்த பெண்மணி எங்களுக்கு கொடுத்த பதில்கள் இதுதான் !!!
” டத்தோ சரவணன் இன்று அலுவலகம் வரமாட்டார் , அப்படி வந்தாலும் நான்கு மணிக்கு மேல் தான் வருவார் , அப்படியே வந்தாலும் யாரையும் பார்ப்பார் என்பது சந்தேகமே ” இது தான் அந்த பெண்மணி கொடுத்த பொய்யான பிள்டாப்பு . அவர் ஏன் டத்தோவை எங்களுக்கு முன்பாக ஒழித்து வைத்து டிராமா காட்டினார் என்பதை நான் அறியேன் பராபரனே !
அட போகட்டும் கழுதை ! என்று என்மனதை தேற்றிக்கொண்டு , ஒரு நல்ல ஞாயிற்றுக்கிழமை பார்த்து பொடிநடையாக தலைநகர் ம .இ . கா . தலைமையகம் நோக்கி சென்றேன் ! அங்கு ஒரு பெண்மணி பிரச்சனைகளோடு வருபவர்களை விசாரித்துக்கொண்டிருந்தார் . நானும் என் பிரச்சனையை சொன்னேன் . MIED போன்ற கடனுதவி திட்டத்தில் வட்டி கட்ட வேண்டி வரும் , நான் கேற்பது போல் வட்டியில்லா கல்விகடனுதவி எதுவும் இங்கு இல்லை , என்று சொல்லி விட்டு பல வட்டியில்லா கல்வி கடனுதவி கொடுக்கும் அரவாரியங்களின் பெயர் பட்டியலை என்னிடம் கொடுத்தார் . பரவாயில்லை ! இந்த உதவியாவது அவரால் செய்ய முடிந்ததே என்ற சந்தோஷத்தில் அங்கிருந்து வெளியேறினேன் . அவர் கொடுத்த பட்டியலில் இருந்து MCEF என்ற அறவாரியத்தை தேர்ந்தெடுத்தேன் . இது நமது நாட்டின் புகழ்பெற்ற செல்வந்தரான ஆனந்தகிருஷ்ணன் அவர்களின் அறவாரியம் . நானும் என் மகனுமாக ஐந்து தடவை அந்த அலுவலகம் சென்று , கடைசியாக அவர்கள் கொடுத்த பதில் PTPTN கடன் வாங்கிய மாணவர்களுக்கு இங்கு கல்விகடனுதவி செய்து தருவதில்லை என்பதாகும் ! ஒரு மாணவனுக்கு கல்வி கடனுதவி கொடுப்பதோ ,அல்லது கொடுக்காமல் போவதும் அந்தந்த அறவாரியத்தின் உரிமையாகும் . அது எனக்கு நன்றாகவே தெரியும் ! ஆனால் முதல் தடவையாக பார்த்த போதே அதை சொல்லியிருக்கலாமே ! ஏன் எங்களை ஐந்து முறை அலைகளித்த பின்பு சொல்லவேண்டும்? ஏழை என்றால் அவ்வளவு இளக்காரமா ?
என்னடா இது ! எப்படி போனாலும் கேட்டு போடுகிறதே ! என்ற வேதனையில் , ஒரு நாள் என் மூன்று பிள்ளைகளையும் அழைத்து , அவர்களிடமே ஐடியா ! கேட்டேன் . அப்போது அவர்கள் சொன்ன ஒரு சில விசயங்கள் எனக்கு அதிர்ச்சி தருவதாக இருந்தது ! 80 சதவீதம் மாணவர்களின் பெற்றோர்கள் ஏழ்மை நிலையில் உள்ளவர்களாம் ! இதில் இன்னொரு வேடிக்கையான ஆனால் வேதனை தரும் சமாச்சாரமும் உண்டாம் ! ஒரு சில தனியார் உயர் கல்விகூடங்களில் நன்றாக படிக்கும் மாணவர்களுக்காக உதவித்தொகை ( SCHOLARSHIP ) கொடுப்பார்களாம் ! அது பற்றி அந்த அலுவலகங்களில் போய் விசாரித்தால் , ” ஆமாம் ! அப்படி ஒரு ஏற்பாடு உண்டு , இன்னும் மூன்று மாதம் கழித்து வாருங்கள் ” என்பார்களாம் ! அவர்கள் சொல்லியது போல் மூன்று மாதம் கழித்து போனால் ,” அடடே ! அதனுடைய விண்ணப்பிக்கும் இறுதி நாள் முடிந்துவிட்டதே ! ” என்று கூறி சமாளிபார்கலாம் .
இப்படியே எழுதிகிட்டு போனா…. ஆகபோவது ஒன்னும் இல்லை ! முதலில் தனி நபர்களால் நடத்தும் அரவாரியாங்களுக்கு பிரதமர் அள்ளிகொடுத்து பணத்தை அழிப்பதை விட ” JABATAN HAL EHWAL PELAJAR -PELAJAR MISKIN KAUM INDIA ” என்ற ஒரு அரசாங்க இலாகாவை ஏற்படுத்தி சகல மானியங்களையும் அதற்கு திருப்பிவிடவேண்டும். இது ஒன்றும் முடியாத காரியமல்ல ! நமது சிலாங்கூர் அரசாங்கத்தில் புல் நடுவதற்கு ” JABATAN LANSKAP ” என்று ஒரு இலாகா இருக்கும் போது , மிளகாய் நடுவதற்கு பல கோடி வெள்ளி அரசாங்க மானியத்தில் ” நாம் அறவாரியம் ” இருக்கும் போது , நமது மாணவர்களுக்கு ஒரு இலாகா இருந்தால் இன்னும் நல்லா இருக்கும் என்று சொல்லவந்தேன் . நமது மாணவர்கள் முயற்சி செய்வார்களா ? நன்றி !!!
இதை தண்ட நஹ்ங்கே ரொம்பே நஹ்லாஹ் சொல்லுறோம். in the ம ஈ கா மிக் அரவரியம் ம்செப் மிதப்
திரு தாப்பா பாலாஜிக்கு நேர்ந்த கதிதான் எனக்கும்.இன்னும் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதிங்கி கொண்டிருக்கிறேன்.என் முதல் மகன் எஸ்.தி.பிஎம். தேர்ச்சி அடைந்து சபா பல்கலை கழகத்தில் இடம் கிடைத்தது.நமது தாய் கூட்டுறவு கழகத்தில் நான் 15 ஆண்டு கால உறுப்பினன்.15,000 வெள்ளி வட்டி இல்லா கடன் கிடைக்கும் என்றார்கள்.நான் மிக்க மகிழ்ச்சி அடைந்து இந்த தொகை என் மகனுக்கு சாப்பாட்டு செலவுக்கும்,இதர செலவுக்கும் சரியாக இருக்கும் என்ற மகிழ்ச்சியில் திளைத்தேன்.நான்கு ஐந்து முறை கடித போகுவரதுக்குப் பிறகு,இறுதியில்,”உங்கள் மகனுக்கு PTPTN கடனுதவி கிடைத்திருப்பதால் எங்களின் கடனுதவி கிடைக்காது” என்று போட்டுவிட்டார்கள் நாமம்.என்ன செய்வது என்று குழம்பி போய் உள்ளேன்.இடையிலேயே என் மகனை அழைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணமும் தலை தூக்கி நிற்கிறது.
மலாய்க்கார மாணவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்து தரமில்லாதிறமை இல்லா ஜென்மங்களை உருவாக்கி உயர் பதவியில் உட்காரவைத்து தங்களுக்கு சாதகமாக எல்லாவற்றையும் சாதித்து கொள்கின்றனர். நம்மை பிரதிநிதிக்கிறேன் என்று சொல்லி நம்மை விற்று வயிர் வளர்க்கும் ஈன ஜென்மங்கள் வேறு–
மு .ப .கரிகாலன் , மனம் தளரவேண்டாம் ! நீங்கள், மேலே நான் எழுதியதை ஏற்கனவே ஒரு தமிழ் நாளிதழுக்கு அனுப்பியிருந்தேன் . அதை படித்து விட்டு என்னை ம.இ.கா. MIED கல்வி கடனுதவி அலுவலகத்திலிருந்து அழைத்து இருந்தார்கள் . முயற்சி செய்துபாருங்கள் ,பிள்ளைகளின் முன்னேற்றத்துக்காக இன்று நான் இருபதாயிரம் வெள்ளி ஆலோங்கிடம் கடன்காரன் !!!!!!!!!!!!