இயற்கைவள, சுற்றுச்சூழல் அமைச்சின் அதிகாரிகள், அச்சு, மின்னியல் ஊடகங்களின் செய்தியாளர்களை ஒரு மிரட்டலாகக் கருதக் கூடாது என்று அதன் அமைச்சர் வான் ஜூனாய்டி துவாங்கு ஜப்பார் கூறினார்.
செய்தி வெளியிடும் செய்தியாளர்கள் தங்கள் கடமையைத்தான் செய்கிறார்கள்.
“நடப்புகளை எப்படிப் பார்க்க்கிறார்களோ அப்படித்தான் செய்தியாளர்கள் அறிவிப்பார்கள். அதில் ஏதாவது தவறு இருந்தால் அதற்கு விளக்கமளிப்பது அதிகாரிகளின் பொறுப்பு.
“அவர்களை மிரட்டலாக நினைக்காதீர்கள். மாறாக, அவர்களுடன் நெருக்கமாக இருங்கள். அது உங்கள் வேலைக்குப் பேருதவியாக இருக்கும்”, என கூச்சிங்கில் நேற்றிரவு அமைச்சு உள்ளூர் ஊடகங்களின் ஆதரவைப் பாராட்டி நடத்திய “ஊடக இரவு” நிகழ்வில் வான் ஜூனாய்டி கூறினார்.


























ஊடகம் நம்பும் படியாகத்தான் உள்ளது செய்திகள் உண்மை அதை பொய்யென்று கூறுவதே இந்த BN PAS MIC MCA அரசியல்வாதிகளின் குள்ளநரித்தனம் எங்கே மக்கள் உண்மை தெரிந்து பின்னி எடுத்திடுவார்கள் என்ற பயம் ஆதலால் ஊடகம் மேல் பழியை போடுகிறார்கள் இந்த நயவஞ்சக BN அரசியல்வாதிகள்