பத்துமலை தைப்பூசத்தில் பாதுகாப்புக்கு போலீஸ் உத்தரவாதம்

thaipusamவார  இறுதியில்  பத்துமலை  தைப்பூசத்  திருவிழாவுக்கு  பக்தர்கள் பயமின்றி   போய்வரலாம்  என  சிலாங்கூர்  போலீஸ்   உத்தரவாதம்  அளித்துள்ளது.

பத்துமலை  ஸ்ரீசுப்ரமணியர்  சுவாமி  ஆலயத்தில்  ஜனவரி  15-இலிருந்து  போலீசார்  காவல்  பணியில்  ஈடுபட்டிருப்பதாக  சிலாங்கூர்  போலீஸ்  படைத்  தலைவர்  அப்துல்  சமா  மாட்  கூறினார். ஜனவரி  24வரை  காவல்  பணி  தொடரும்.

“பாதுகாப்பை உறுதிப்படுத்த  போதுமான  காவலர்களை  அங்கு  நிறுத்தி  வைத்திருக்கிறோம்.

“எனவே,  பாதுகாப்பு  குறித்து  பொதுமக்கள் அஞ்ச  வேண்டியதில்லை”,  என  ஷா  ஆலம்  போலீஸ்  தலைமையகத்தில்  செய்தியாளர்களிடம்  அப்துல் சாமா  தெரிவித்தார்.