மகாதிர்: நஜிப்பை அகற்றும் முயற்சியைக் கைவிட மாட்டேன்

giveபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்    அவரது  நிலையை  வலுப்படுத்திக்  கொண்டிருப்பதுபோல்  தோன்றினாலும்  அவரைப் பதவியிலிருந்து  அகற்றும்  முயற்சியைக்  கைவிடுவதில்லை  என்பதில்  உறுதியுடன்  இருக்கிறார்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்.

“அதை  நான் கைவிடவில்லை.  ஏனென்றால்  அது  முக்கியமான  ஒன்று.

“நஜிப்பின்  ஆட்சியில்  பொருளாதாரம்,  அரசியல்,  அறிவியல்,  தொழில்நுட்பம்,  அறிவு  எல்லாமே  வீழ்ச்சி  கண்டிருக்கிறது”,  என  புத்ரா ஜெயாவில்  மகாதிர்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

நஜிப்  தொடர்ந்து  பிரதமராக  இருப்பதற்காக  தன்  செல்வாக்கை  நிலைநிறுத்திக்  கொள்வதில்  கவனம்  செலுத்தியதுதான்  இந்த  வீழ்ச்சிக்குக்  காரணம்.

“செல்வாக்கைப்  பெறப்  பணம்  பயன்படுத்தப்பட்டது.

“ரிம2.6பில்லியன் (நன்கொடை) தேர்தலில் (பாரிசான்  நேசனல்)  வெற்றிபெறப்  பயன்படுத்தப்பட்டது  என்பதை  அவரே(நஜிப்)  ஒப்புக்கொண்டிருக்கிறார்”, என  முன்னாள்  பிரதமர்  மகாதிர்  கூறினார்.