நேற்று பிற்பகல், சாங்காட் ஜெரிங் டோல் சாவடியில் போலீசார் ‘மாமாக் குண்டர் கும்பலை’ச் சேர்ந்த ஒருவனைச் சுட்டுக் கொன்றதுடன் மற்றும் இருவரைச் சிறை பிடித்தனர்.
நேற்று காலை நெகிரி செம்பிலான் ராசாவில் நடந்த கொள்ளை பற்றித் தகவல் கிடைத்ததும் தைப்பிங் போலீசார் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கி டோல் சாவடி அருகே காத்திருந்ததாக பேராக் போலீஸ் தலைவர் ஒஸ்மான் சாலே கூறினார்.
“நிறுத்தச் சொல்லியும் நிறுத்தாமல் அச்சந்தேகப் பேர்வழிகள் அவர்களின் காரை போலீஸ் காருடன் மோதினார்கள். போலீசார் சுட வேண்டியதாயிற்று. அதில் துப்பாக்கி தோட்டாக்கள் கார் ஓட்டுனரின் விலா எலும்பில் பாய்ந்தன.
“உயிரிழந்த சந்தேகப் பேர்வழிக்கு வயது 38. மற்ற இருவரில் ஒருவருக்கு வயது 31, இன்னொருவருக்கு 33. எல்லாருமே பேராக்கைச் சேர்ந்தவர்கள். அவர்கள்மீது ஏற்கனவே குற்றப்பதிவுகள் உள்ளன”, என்று ஒஸ்மான் நேற்றிரவு தைப்பிங்கில் கூறினார்.
சுட்டுக் கொல்லுபவன் சுட்டுக் கொல்லப்படுவான்! இது தான் நியதி!
உண்மையான மிகக்கொடுரமான குற்றவாளி ,பலரின் உயிருக்கு விலை பேசியவன் என்றால் பொலிசாரின் செயலுக்கு வீர வணக்கம் செய்கின்றேன். ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் கொடூரமான செயல்களுக்கு அஞ்சி நடுங்க வேண்டிய சூழ்நிலையில் வாழ வேண்டிய சூழ்நிலைக்கு ஆளக்கபடுகின்றோம். அதேபோல அந்நிய தொழிலார்களின் வருகையும் குற்றங்கள் நடைபெறுவதற்கு வழிவகுக்கின்றன , இதனை நமது காவல்துறையின் பார்வை விழ வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். நன்று.
பென்சில் திருடுபவனையும் சுட்டு கொன்றுவிடுகிறார்கள், நமது போலீசார். சபாஷ். ஆனால், எந்த ஒரு பயங்கரவாதியையோ, தீவிரவாதியையோ, அல்லது IS காரர்களையோ கொல்வதில்லையே. ஏன்?
மலேசியா மாமாக்கள் மற்றும் penang மாமாக்கள் கொ… சுருண்டு போயி ருக்குமே…………..
சிங்கம் கேள்வி நன்றி .கரணம் அவர்கள் முஸ்லிம் என்பதால் .அவர்களை புடித்து கௌன்சிலிங் கொடுகிறது இந்தா மலேசியா நாடு .
அசிட் ஊததியவ்ரகள் கம்பிதிருடி சொந்தக்காரனாகி ஒய் பி ஆனவர்கள் இரும்புத்திருடர்கள்,உலோக திருடர்கள் கட்சி பாரம் திருடியவர்கள், ஹாஸ்பிடல் கஞ்சா வினியோகிகள்,இப்படி மண்புமிகுகளாக ஒளிந்திருப்பவ்ர்களையும் கவனிக்க வேன்டும் இவர்4களை சூட்டு விடாதீர்கள் தெருவில் இழுத்து செல்லுங்கள் எதிர்கால படிப்பினையாக இருக்கட்டும்