‘மாமாக் குண்டர் கும்பலை’ச் சேர்ந்தவன் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டான்

mamak gangநேற்று  பிற்பகல்,  சாங்காட்  ஜெரிங்  டோல்   சாவடியில்  போலீசார் ‘மாமாக்  குண்டர்  கும்பலை’ச்  சேர்ந்த ஒருவனைச்  சுட்டுக்  கொன்றதுடன்  மற்றும்  இருவரைச்  சிறை  பிடித்தனர்.

நேற்று  காலை  நெகிரி  செம்பிலான்  ராசாவில்  நடந்த  கொள்ளை  பற்றித்  தகவல்  கிடைத்ததும்  தைப்பிங் போலீசார்  சுறுசுறுப்பாக  இயங்கத்  தொடங்கி  டோல்  சாவடி  அருகே  காத்திருந்ததாக  பேராக்  போலீஸ்  தலைவர் ஒஸ்மான்  சாலே  கூறினார்.

“நிறுத்தச்  சொல்லியும்  நிறுத்தாமல்  அச்சந்தேகப்  பேர்வழிகள்  அவர்களின்  காரை  போலீஸ்  காருடன்  மோதினார்கள்.  போலீசார்  சுட  வேண்டியதாயிற்று. அதில்  துப்பாக்கி  தோட்டாக்கள்  கார்  ஓட்டுனரின் விலா  எலும்பில்  பாய்ந்தன.

“உயிரிழந்த  சந்தேகப்  பேர்வழிக்கு  வயது  38. மற்ற  இருவரில் ஒருவருக்கு வயது  31, இன்னொருவருக்கு  33.  எல்லாருமே  பேராக்கைச்  சேர்ந்தவர்கள்.  அவர்கள்மீது  ஏற்கனவே  குற்றப்பதிவுகள்  உள்ளன”, என்று  ஒஸ்மான் நேற்றிரவு  தைப்பிங்கில்  கூறினார்.