ரபிஸி அவதூறு குற்றம் புரிந்திருக்கிறார்: நீதிமன்றம் தீர்ப்பு

famaபாண்டான் எம்பியும் பிகேஆர் உதவித் தலைவருமான ரபிஸி ரம்லி அவதூறு குற்றம் செய்திருக்கிறார்  என  பெட்டாலிங் ஜெயா  செஷன்ஸ்  நீதிமன்றம்  இன்று  தீர்ப்பளித்தது.

அக்குற்றத்துக்காக  அவருக்கு  ரிம1,800  அபராதம் விதிக்கப்பட்டது. ரிம1,800  என்பதால்  அவரது  எம்பி  பதவி  தப்பியது.  அபராதம்  ரிம2,000  அல்லது  அதற்குமேல்  போனால்  அவர்  நாடாளுமன்ற  உறுப்பினர்  பதவியை  இழக்க  நேர்ந்திருக்கும்.

2014-இல் தேவாலயங்களின் மீது பெட்ரோல் குண்டு வீசியதற்குப் பின்னணியில்  சிலாங்கூர் அம்னோ இருப்பதாக  ரபிஸி  கூறினார்  என்பதை  அரசுத்தரப்பு  ஐயத்துக்கிடமின்றி  தெளிவாக நிரூபித்திருக்கிறது  என  நீதிபதி அஸ்வர்னிடா அரிபின்  கூறினார்.