கெடா அரசியல் நெருக்கடியில் அரசப் பேராளர் மன்றம் நடுநிலை வகிக்கும்

kedahகெடா அரசப்  பேராளர் மன்றம்  அம்மாநிலத்தில்  நிலவும்  அரசியல் நெருக்கடியில்  எந்தத்  தரப்பையும்  ஆதரிப்பதில்லை என்று  முடிவெடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட தரப்புக்களே  பிரச்னையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அது அறிவுறுத்தியுள்ளது.

“கெடா  அரசப்  பேராளர்  மன்ற  உறுப்பினர்கள்  கெடாவில் ஏற்பட்டுள்ள அரசியல்  சர்ச்சையைக்  கவனத்துக்  கொண்டுதான்  இருக்கிறார்கள். இந்த  விவகாரத்தில்  உறுப்பினர்கள்  எந்தத்  தரப்புக்கும்  ஆதரவு  காட்ட  மாட்டார்கள்,  சலுகை  காட்ட  மாட்டார்கள்,  நடுநிலைதான்  வகிப்பார்கள்  என்பதை   அரசப் பேராளர்  மன்றம்  வலியுறுத்த  விரும்புகிறது”, என  அம்மன்றம்  தெரிவித்தது.