வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான லெவி கட்டணம் ரிம1,250-இலிருந்து ரிம2,500-ஆக திடீரென உயர்த்தப்பட்டிருப்பதற்கு மலேசிய பொருள் தயாரிப்பாளர்கள் சங்கச் சம்மேளனம் (எப்எம்எம்) எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
லெவியை உடனடியாக உயர்த்துவது ஏற்புடையதல்ல என்று கூறிய எப்எம்எம் அம்முடிவு வர்த்தகத்தைப் பாதித்து சமூக- பொருளாதார விளைவுகலையும் உண்டுபண்ணும் என்று குறிப்பிட்டது.
லெவியை இப்போதைய விகிதத்திலேயே வைத்திருந்து பொருளாதாரச் சூழல் மேம்பட்டவுடன் உயர்த்திருக்கலாம்.
“லெவி இரட்டிப்பாக உயர்த்தப்பட்டது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. முதலாளிமார்களின் வேண்டுகோளை அரசாங்கம் கருத்தில் கொள்ளவில்லை”, என எப்எம்எம் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
இப்படியே “வெளிநாட்டு தொழிலாளர்கள்” என்று கூறி, நாட்டில் 5 மில்லியன் “வெளிநாட்டினரை” குடியேற்றம் செய்துள்ளீர்கள்.
உள்நாட்டு தொழிலாழியை ஓரங் கட்டும் பலமுதலாளிகளுக்கு லெவி கட்டணத்தை இன்னும் அரசாங்கம் அதிகரிக்க வேண்டும்.வெளி நாட்டு தொழிலாளியால் பல பேர்வேலை வைப்பை.இழப்பத்தோடு குறைந்த சம்பளத்தில் வேலை செய்யவேண்டி உள்ளது .