கெடா மந்திரி புசாரை மாற்றுவதைவிட பிரதமரை மாற்றுவதே நாட்டுக்கு அதிக நன்மையைக் கொண்டு வரும் என்கிறார் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்.
கெடாவில் நிலவும் அரசியல் குழப்பநிலைமீது கருத்துரைத்தபோது பொக்கோக் சேனா எம்பி மாபுஸ் ஒமார் அவ்வாறு கூறினார்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பலவீனங்களாலும் தவறுகளாலும் பெரிய விளைவுகள் உண்டாகுமா, கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிரின் பலவீனங்களால் பெரிய தவறுகள் உண்டாகுமா என்றவர் வினவினார்.
“முக்ரிசை அகற்றுவது நாட்டின் பொருளாதாரத்துக்கு நன்மையைக் கொண்டு வரப்போகிறதா?
“முக்ரிசுக்கு எதிரான புத்ரா ஜெயாவின் அரசியல் திட்டம் பொருளாதாரத்தை மீட்சியுற வைத்து, நாணயத்தை வலுப்படுத்தி, நாட்டின் வருமானத்தை அதிகரிக்கப் போகிறதா?
“மலேசியாமீது வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையைத் திரும்பப் பெற அது உதவுமா? முக்ரிசை அகற்றுவது மக்கள் எதிர்நோக்கும் வாழ்க்கைச் செலவின உயர்வைக் குறைக்கப் போகிறதா?”, எனக் கேள்விகளாக அடுக்கினார் மாபுஸ்.
கெடா மக்களுக்கு அடுத்து வரப்போகும் மந்திரி புசார் பற்றி கவலை இல்லை.
“மந்திரி புசாரை மாற்ற வேண்டிய அவசியம் என்னவென்றுதான் கெடா மக்கள் கேட்கிறார்கள்.
“நஜிப் கெடா மக்களின் விருப்பத்தைப் புரிந்து கொள்ளாமலிருப்பதுதான் ஏன் என்று எனக்குப் புரியவில்லை”, என்றார்.
இதைத்தான் சொல்லி சொல்லி சீ என்றாகிவிட்டதே ! எல்லாம் அவன்கையில் இருக்கும் போது என்ன நடக்கும்? பணம் பதவி அதிகாரம் அத்துடன் ஈன ஜென்மங்களின் ஆதரவு – இது முதலாம் உலகம் இல்லையே. எல்லாம் கானல் நீர்.
மொக்க risk அப்பன் tun காக்கா அவன் ஆட்சியில் சுருட்டிய சொத்துக்கள் விபரம் தெரியுமா? அதுவும் இன்றுள்ள விலைவாசிக்கு முக்கிய காரணம். kencana sapura வெளி நாட்டு குத்தகைகளை எப்படி petronas உதவியுடன் கைப்பற்றினர் தெரியுமா? ஒரு பிரதமர் இருக்கையில் இருந்து கொண்டே நாட்டின் முக்கிய பொருளாதார வாய்ப்புகளை தனக்கு வேண்டியவாறு அமைத்து கொண்டது எந்த வகையில் நியாயபடுத்துகிரீர்? அம்னோ பாரு எங்களுக்கு செய்த துரோகம் நினைத்து பார்க்க முடியாதது.அதை முற்றிலும் அழிக்கும் வரை நம்பிக்கை நாயகன் ஆட்சி செய்ய வேண்டும்….அதுவரை பொத்திகிட்டு போடா!
முக்ரிஸ் பதவி இழப்பது எனக்கு ஒரே ஒரு மகிழ்ச்சி மட்டும்மே ! அவன் அப்பன் துன்பபடுவது ! வாக்கு அளித்த மக்களுக்கு எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் !