பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைவராக இருக்கும்வரை அம்னோ பலவீனமாகத்தான் இருக்கும் என்று முக்ரிஸ் மகாதிர் காட்டமாகக் குறிப்பிட்டார்.
கெடா மந்திரி புசார் பதவியிலிருந்து விலகுவதை அறிவிப்பதற்காகக் கூட்டப்பட்டிருந்த செய்தியாளர் கூட்டத்தில் முக்ரிஸ் பேசினார்.
“இதைச் சொல்ல வருத்தமாக உள்ளது. நஜிப் உள்ளவரை அம்னோ இப்போதிருப்பதைப்போல் மிகவும் பலவீனமாகத்தான் இருக்கும்”, என்றார்.
“ஊழலுக்குமேல் ஊழல். தாங்க முடியவில்லை. நம்மை வாட்டி வதைக்கிறது. வெளிநாடுகளில் தலைநிமிர்ந்து நடக்க முடியவில்லை”, என்றவர் சொன்னார்.
அம்னோவில் மூன்று மில்லியனுக்குமேல் உறுப்பினர்கள் இருந்து என்ன பயன். யாராலும் தலைவருக்கு எதிராக எதுவும் சொல்ல முடிவதில்லை.
கடந்த ஆண்டு அம்னோ ஆண்டுக் கூட்டமே அதற்குச் சான்று என முக்ரிஸ் குறிப்பிட்டார். அதில் அம்னோ மரபுகள் மீறப்பட்டு நஜிப் மட்டுமே முதலிலும் முடிவிலும் பேசினார்.
வழக்கமாக, கூட்டத்தின் முடிவில் தலைவருடன் துணைத் தலைவர், உதவித் தலைவர்கள், இளைஞர் தலைவர் ஆகியோரும் பேசுவார்கள்.
“இந்தச் சிறுபிள்ளைத்தனம் (நஜிப்பின்) தொடக்கவுரையிலும் காணப்பட்டது. கூட்டத்தில் டாக்டர் மகாதிர் முகம்மட், (அம்னோ) துணைத் தலைவர் போன்ற முக்கிய பெருமக்களும் இருந்தனர். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை”, என முக்ரிஸ் கூறினார்.
அடுத்த பொதுத்தேர்தலில் கெடா அரசை பாஸ் கட்சி கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது.
1968ம் ஆண்டு. அப்போதைய பிரதமர் துங்கு அப்துல் ரகுமானை இம்சை படுத்தினார் மகாதிமிர் முகம்மது. அம்னோவை விட்டே மகாதிமிரை தூக்கி எறிந்தார் துங்கு. அதே சகாப்தம் மகன் விஷயத்திலும் ஏற்படும் போல் தெரிகிறது. ஆனாலும், தனது கெட்டிக்காரத்தனத்தால் பத்தாண்டுகளுக்குப் பின் ஆட்சியைப் பிடித்தார் மகாதிமிர். அப்பனைப் போன்று முக்ரிசும் பின் வாங்க மாட்டார். இனிமேல் வரப்போகும் அம்னோவின் கூத்துகளை நாம் ரசிக்கத் தவறக்கூடாது. ம.இ.கா.வின் தற்போதைய நோஞ்சான் கோழிகளுக்கும், செத்த பாம்புகளுக்கும் நடக்கும் கரையான் பொறுக்கும் விஷயங்களில் கவனம் செலுத்துவதை தவிர்ப்போம்.
இப்பொழுதான் உங்களுக்கு தெரியுதோ? முன்பு தூக்கி வைத்து புகழ் பாடிவந்தீர்கள் இப்பொழுது கசக்குதோ? தமிழர்கள் உரிமை, பொருளாதாரம்,கல்வி,அரசு வேலைவாய்பு மற்ற அணைத்து துறையிலும் உங்கள் தந்தை செய்த நாதேறி வேலை உங்களுக்கு தெரியவில்லையோ.உங்களுக்கு இந்த நிலை வந்ததால் வேதனையில் வந்த சொல்.உங்கள் தந்தையால் எங்கள் நிலை எப்படி இருந்திருக்கும் என்று சற்று யோசித்து பாருங்கள் விடை கிடைக்கும்.
அடுத்த பொதுத்தேர்தலில் கெடா அரசை பாஸ் கட்சி கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது.
என்ன ஒரு நப்பாசை சிங்கம்
தம்பி கும்கி! உங்களுக்கு அரசியல் தெரியாது என எனக்கு நன்றாகவே தெரியும். அடுத்த பொதுத்தேர்தலில் கெடா அரசை பாஸ் கைப்பற்றுவது உறுதி என எனது ஆதாரங்களை முன் வைக்கிறேன். உங்களுக்காக அல்ல, அனைவரும் தெரிந்துகொள்ள. சென்ற 2013 தேர்தலில், முக்ரிஸ் தான் மந்திரி புசார், கெடா மக்கள் ஒரு வாய்ப்பு தர வேண்டும், என கடுமையான பிரச்சாரம் ஒரு புறம். இதற்காக மகாதிருடன் ஒட்டுமொத்த கெடா மக்களும் செயல்பட்டார்கள், [மகாதிமிரின் கஜானாவும் பெரும் பங்காற்றியது]. மொத்தமுள்ள 36 சட்டமன்ற தொகுதிகளில், BN 21ஐ கைப்பற்றியது. பாஸ் [9], பி.கே.ஆர் [4].டி.எ.பி [2] ஆக, பக்காத்தானுக்கு 15 சீட். முக்ரிசுக்கு ஒரு வாய்ப்பு தரவேண்டும் என்பதற்காகவே ஆட்சி மாறியதே ஒழிய, எதிர்த்தரப்பின் வேகம் கெடாவில் இன்னும் மங்கவில்லை. இந்நிலையில் நேற்று நடைப்பெற்ற நம்பிக்கை இல்லா தீர்மானம் முக்ரிசுக்கு எதிராக கொண்டு வந்த பொது, எதிர்த்தரப்பின் 15பேரும், அம்னோவைச் சேர்ந்த 3 பேரும், [மொத்தம் 18 பேர்] முக்ரிசை ஆதரித்தனர். எதிர்வரும் பொதுத்தேர்தலில் இந்த 18 சீட்களும் முக்ரிசை ஆதரிப்பது நிச்சயம். அம்னோவின் 18 சீட்களில் முக்ரிசின் ஆதரவு வாக்குகளும் இடம்பெற்றுள்ளது என்பதை மறக்கக் கூடாது. அதில் முக்ரிசின் ஆதரவு பெற்ற எதிர்தரப்பு மிக எளிதில் குறைந்தது ஐந்து தொகுதிகளை கைப்பற்றும். [குறைந்த வாக்குகளில் BN வெற்றிபெற்ற 5 தொகுதிகள் இவை. Bukkit Lada , Bakar Bata , Gurun , Belantek , Kulim , ஆகியவை]முக்ரிசின் ஆதரவோடு குறைந்தது 23 தொகுதிகளை எதிர்தரப்பு கைப்பற்றும். இது, நான் சேகரித்த facts . கெடா அரசை பாஸ் கைப்பற்ற இயலாது, என்கிற உங்களது வாதத்தை எடுத்து வையுங்களேன் பார்ப்போம்!.
பாஸ் கட்சியைவிட PKR , DAP கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றினால் கெட மாநிலம்
வளர்ச்சியடையும்.