‘ஜோ லவ்-வை விசாரணைக்கு அழைக்கும் துணிச்சல் இல்லாத பிஏசி தலைவர் பதவி விலகுவதே நல்லது’

resபொதுக் கணக்குக்குழு(பிஏசி)த்  தலைவர்  ஹசான்  அரிபின்,  ஆடம்பர பிரியரான  தொழில் அதிபர்  லவ்  தேக்  ஜோ-வை  நாடாளுமன்றக்  குழுவின்  விசாரணைக்கு  அழைக்க  வேண்டும்.   இல்லை  என்றால்  பதவி  விலகுவதே  நல்லது.

“1எம்டிபி  பற்றிய  விசாரணைக்கு  வருமாறு  அவரை  அழைக்கும்  துணிச்சல்  இல்லை  என்றால்  ஹசான்  பிஏசி  தலைவர்  பதவியிலிருந்து  விலக   வேண்டும்”, என  டிஏபி  பெருந்  தலைவர்  லிம்  கிட்  சியாங்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

லவ்-வை  விசாரணைக்கு  அழைப்பதென  பிஏசி  ஏற்கனவே  முடிவு  செய்திருந்தது. 1எம்டிபி  முறைகேடு  பற்றி சாட்சியமளிக்க  லவ்  அழைக்கப்படுவார்  என  ஹசானுக்கு  முன் பிஏசி  தலைவராக  இருந்த  நூர் ஜஸ்லான்  முகம்மட்  அறிவித்திருந்தார்.

நூர்  ஜஸ்லானின்  முடிவு  ஏன்  மாற்றப்பட்டது  என்பதற்கு  ஹசான்  இதுவரை  நியாயமான  விளக்கம்  அளிக்கவில்லை. அவரது  விளக்கதுக்காக  பொதுமக்கள்  இன்னும்  காத்திருக்கிறார்கள்  என லிம்  கூறினார்.