‘நாங்கள் வங்காள தேசிகள் அல்லவே, அதனால்தான் தடுக்கப்பட்டோம்’- எம்டியுசி காட்டம்

mtucமலேசிய  தொழிற்சங்கக்  காங்கிரஸ்  (எம்டியுசி)  உறுப்பினர்கள்  சுமார்  50  பேர்,   அடுத்த  மூன்றாண்டுகளில்  1.5 மில்லியன்  வங்காள  தேசத்  தொழிலாளர்களைக்  கொண்டுவரும்  திட்டத்திற்கு  எதிர்ப்புத்  தெரிவிக்க  இன்று மனிதவள,  உள்துறை  அமைச்சுகளுக்குமுன்  கூடினர்.

இன்று  காலை  மணி  10.30க்கு  அவர்கள்  அமைச்சகங்களுக்குள்  சென்று  மகஜர்  கொடுக்க  முனைந்தனர். அவர்களை  உள்ளே  செல்ல  விடாமல்  பாதுகாவலர்கள்  தடுத்து  நிறுத்தினர்.

அதனால்  அமைச்சுகளுக்கு  வெளியிலேயே  அவர்கள்  மறியல்  போராட்டத்தில்  இறங்கினர்.

“நாங்கள்  வங்காள  தேசிகளாக  இருந்திருந்தால்  சந்தித்திருப்பார்கள்”, என  எம்டியுசி  இடைக்காலத்  தலைவர்  அப்துல்லா  சனி  அப்துல்  ஹமிட்  குத்தலாகக்  கூறினார்.

15-நிமிடம்  கழித்து  இரு  அமைச்சுகளின் பிரதிநிதி  ஒருவர்  வந்து  அவர்காளிடமிருந்து மகஜர்களைப்  பெற்றுக்  கொண்டார்.