பதிவு செய்யப்படாத அன்னிய தொழிலாளர்கள் மிகப் பெரிய எண்ணிக்கையில் இருப்பதாகவும் அவர்கள் எப்படி நாட்டுக்குள் வந்தார்கள் என்பதையும் அவர்களைக் கொண்டுவந்த “கயவர்கள்” யார் என்பதையும் கண்டறிய அரச விசாரணை ஆணையம் (ஆர்சிஐ) அமைக்கப்பட வேண்டும் என்றும் மலேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் (எம்டியுசி) கோரிக்கை விடுத்துள்ளது.
வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வருகை முடக்கி வைக்கப்பட்ட மறுநாளே சட்டவிரோத அன்னிய தொழிலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் சுமார் ஆயிரம் பேர் பிடிபட்டனர் என எம்டியுசி தலைமைச் செயலாளர் என்.கோபாலகிருஷ்ணன் கூறினார்.
“இது வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பெரிய எண்ணிக்கையில் இங்கு இருப்பதைக் காண்பிக்கிறது. எனவே, புதிதாக வெளிநாடுகளிலிருந்து தொழிலாளர்களைக் கொண்டு வருவதை விடுத்து இவர்களைச் சட்டப்பூர்வ தொழிலாளர்களாக மாற்ற வேண்டும்.
“அத்துடன், மலேசியா மேன்மேலும் அதிகமான வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கொண்டுவரும் எண்ணத்தைக் கைவிட்டு நம் நாட்டு இளைஞர்கள் ஏன் அந்த வேலைகளைச் செய்வதில்லை, என்றும் அப்படியே செய்தாலும் ஏன் நீண்டகாலம் நிலைத்திருப்பதில்லை என்பதையும் விரிவாக ஆராய வேண்டும்”, என்றும் கோபாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.
எவ்வித தஸ்தாவேஜுகளும் இல்லாத ஒரு வெளிநாட்டு சட்டவிரோத தொழிலாளியை கேட்டேன்: “எப்படி இந்த நாட்டிற்குள் புகுந்தாய்?” அவன் கூறிய ஒரே பதில்: காசி லிமபுலு ரிங்கி சுடாலா [Kasi lima puluh ringgit sudah lah } ” என்பதாகும். இதில் சம்பந்தப்பட்டுள்ள அதிகாரிகளும் சரி, ஊழியர்களும் சரி, அமைச்சர்களும் சரி, என்னத்தைதான் திங்கிறார்கள் என்று யாராவது கண்டுப்பிடித்து சொல்லுங்களேன்.
ஹஹஹ இதுதான் 80ல் இருந்து நடக்கிறதே–யாருக்கு தைரியம் இருக்கிறது இதைப்பற்றி கேட்க? இது ஒரு திறந்த ரகசியம். சாபா சராவாக்கில் போய் பாருங்கள்— எவ்வளவு பேர் அங்குள்ள தோட்டங்களில் வேலை செய்கிறார்கள் என்று –யார் அவர்கள்?
மலேசியாவில் ஒரு வலையை விரித்தால் நான் நினைக்கிறன் 1.5மில்லியன் சட்ட விரோத அந்நிய தொழிலாளர்கள் இருப்பார்கள் போலிரிகிறது.
இதுஎல்லாம் அரசு அதிகாரிகளுக்கு தெரிந்துதானே நடக்கிறது. பங்க்லாதேசிகளை கொண்டு வர ஒப்பந்தம் செய்த பின்னர் தடை செய்து விட்டோம் என்கிறது அரசு. ஆனால் அவர்கள் வந்த வண்ணம்தானே இருகின்றனர். எல்லாம் ஒரு கண் துடைப்புதான்.
இன்துணை கரணம் அமைச்சர்கல் .பணம் குறி ,நாடு எப்படி போன்லாம் கவலை இல்லை .
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது .அதுவும் நம் நாட்டில் திருட்டு தொழில் செய்வதற்கு லைசன்ஸ் கொண்டுள்ளனர் .
மலேசியாவில் உள்ள எல்லாம் விமான நிலையங்களில் மக்கள் விழிப்பு நிலையில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறன்,யாருக்கு தெரியும் பிரிந்து வந்தார்கள் என்றால் (பங்களாதேஸ்) …
இவர்கள் எல்லோரும் இந்நாட்டுக்குள் நுழையும் பொழுது அரசாங்கமும் அதன் இலாக்காக்ளும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தன! போலிஸ் என்ன செய்தது? உள்நாட்டு மந்திரி என்ன செய்தார். இராணுவப் பிரிவுகள் என்ன செய்தன. குடிநுளைவுத் துறை என்ன செய்தது? பிரதம மந்திரி என்ன செய்தார். மகா வெட்கக் கேடான விஷயம். இந்நாட்டு மக்களை பலவகையில் பயமுறுத்தி அடக்கி ஆளும் அரசாங்கம், அன்னியர்களுக்கு நண்பர்களாயும், நன்றியுள்ள நாயாகவும் இருப்பது வேடிக்கை. அவமானம்.
சபாஷ் தேனீ . அருமையாகச் சொன்னீர். .
ஒவ்வொவொருவனும் உள்ளே வந்ததும் எவ்வளவு பணம் பங்குப் போட்டுக் கொள்ளலாம் என்று மிக மிக விழிப்பு நிலையில் இருந்தார்கள்! அவர்களுக்காவது தூக்கம் வருவதாவது!
சபாக்ஷ்தேனி.எந்த வெளி நாட்டுக்காரனும் போலிஸ்சையோ, இமிகிரேசனுயோ.கண்டு பயபடுவதேஇல்லை.டுயட் கோப்பி கசி சுடாலா.
பாதுகாப்பு ,அச்சுறுத்தல் சட்டம் அனைத்தும் மலேசியர்களுக்கு மட்டுமே.வெளிநாடினருக்கு அல்ல.அதன் வெளிப்பாடு சுதந்திரத்தில் செயல்படும் வெளிநாடினர்.
அப்படியானால் நாட்டில் தீவிரவாதிகள் நுழைவதற்கு எத்தனை ரிங்கிட்?
நமது தலைவர்கள் சுருட்ட வேண்டியதை இப்போதே சுருட்ட வேண்டும் ,இன்னும் 2020 தில் இந்தோனும் ,பங்களாவும் ,மந்திரியாக இருப்பான் , நமக்கு இருக்கும் ஒரு மந்திரி பதவிக்கும் ஆப்பு !!