ஜைட்: மார்ச் 27 பேரணி அறைக்குள் நடக்கும் ஒரு கூட்டமாகும்

ralமுன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டும்  முன்னாள்  அமைச்சர்  ஜைட்  இப்ராகிமும்   பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  எதிராக    ஏற்பாடு  செய்வதாகக்  கூறப்படும்  பேரணி  ஒரு பொது  ஆர்ப்பாட்டம்  அல்ல.

அது  மூடிய  அறைக்குள்  நடக்கும்  ஒரு  கூட்டமாகும்  என  ஜைட்  கூறினார்.

“பலரும்  மார்ச்  27  பேரணி  பற்றிப்  பேசுவதைப்  பார்க்கிறேன்.  அது  தலைவர்கள்  ஒன்றுகூடி  நடத்தும்  ஒரு  கூட்டம்தான்.

“அது  தெரு  ஆர்ப்பாட்டம்  என்றோ  பொதுமக்கள்  கலந்து  கொள்ளும்   ஒரு  பேரணி  என்றோ  நான்  சொன்னதில்லை.

“அது  பெர்சே  போன்ற  பேரணி  அல்ல”,  என்றாரவர்.