அம்னோ உச்ச மன்றம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரபிடா அசீஸ் அம்னோ அறிவுறுத்தியிருப்பதை அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அசீஸ் நிராகரித்தார்.
ரபிடா விரும்பியதைப் பேசலாம். ஆனால், அவருடைய பேச்சு எடுபடாது என நஸ்ரி கூறினார்.
“ரபிடா ஒரு செல்லாக்காசு. நம் நாட்டில் பேச்சு சுதந்திரம் உண்டு. அவர் விரும்பும்வரை குரைத்துவிட்டுப் போகட்டும்”, என நஸ்ரி புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.
நீண்ட காலம் அம்னோ மகளிர் தலைவியாக இருந்த ரபிடா, நேற்று செய்தியாளர்களிடையே பேசியபோது, உச்ச மன்றம் நஜிப்புக்கு உள்ளதை உள்ளபடி எடுத்துரைக்க வேண்டும் என்று குறிப்பிட்டு அதை வலியுறுத்த சிறுவர் கதையான சட்டை அணியாத சக்கரவர்த்தி கதையையும் கூறினார்.
குரைப்பது உனது வாடிக்கை.செல்லாகாசு உனது செயல்.வீணடிப்பது மக்கள் வறி பணம்.
ரபிடா செல்லா காசா? காலம் கடந்துதான் பல உண்மைகள் வெளியாகின்றன. இப்போதைய அம்னோவினரும் செல்லா காசு என காலம் கடந்துதான் சொல்வீரோ?
மூத்த அரசியல்வாதிகளின் அறிவுரையைக் கேட்க விருப்பமில்லை என்று அமீநோவில் சொல்வதானது, நானே ராஜா நானே மந்திரி என்ற அகங்கார நிலைக்கு அக்கட்சி சென்று விட்டதை புலப்படுத்துகின்றது. எமக்கென்ன நீர் சொல்வது உம்மக்கென்ன நான் மரியாதை கொடுப்பது என்ற நிலைக்கு வந்து விட்ட பிறகு, அக்கட்சி அழிவை நோக்கிச சென்று கொண்டிருக்கின்றது என்பது வெள்ளிடைமலை.
ஐயா இந்த மாமி, மாமாக் சென்றவழியில் தான் நஜிப் செல்கிறார். மருமகன் நாசா கம்பெனி எ.பி. பெர்மிட்டை யாரும் மறந்து விடவில்லை