ஒரு சர்வாதிகாரி உருவாகிறார்: முகைதின் எச்சரிக்கை

warnபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  அதிகாரங்களைத்  தம்  கைக்குள்  வைத்துக்கொண்டு  ஒரு  சர்வாதிகாரியாக  மாறி  வருகிறார்  என  அம்னோ   துணைத்  தலைவர்  பதவிலிருந்து  இடைநீக்கம்  செய்யப்பட்ட  முகைதின்  யாசின்  கூறுகிறார்.

“மக்களின்  ஆத்திரத்தை  எதிர்நோக்கும்  நஜிப்,  கருத்து  மாறுபடுவோரையும்  குறைகூறுவோரையும்  ஒடுக்க  தம்மிடமுள்ள  அதிகாரங்களைப்  பயன்படுத்திக்  கொள்கிறார்.

“உண்மையில்  ஜனநாயக  அமைப்புமுறைகளின்  வீழ்ச்சியையும்  ஒரு  புதிய  சர்வாதிகாரியின்  உருவாக்கத்தையும்  கண்டு  வருகிறோம்”, என  முகைதின்  இன்று  காலை   ஒர்  அறிக்கையில்  கூறினார்.