முகைதின்: முன்னாள் ஏஜி, நஜிப்புக்கும் எஸ்ஆர்சிக்கும் எதிரான ஆதாரங்களைக் காண்பித்தார்; அது குற்றச்செயல்தான்

evidஅரசுத்  தொடர்புள்ள   எஸ்ஆர்சி இண்டர்நேசனல்  நிறுவனத்திலிருந்து  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்   வங்கிக்  கணக்குக்குப்  பணம்  மாற்றிவிடப்பட்டதற்கான  ஆதாரங்கள்  தம்மிடம்  காண்பிக்கப்பட்டதாக  இடைநீக்கம்  செய்யப்பட்ட  அம்னோ  துணைத்  தலைவர்  முகைதின்  யாசின்  கூறுகிறார்.

அந்த  ஆதாரங்களிலிருந்து  ஒரு  குற்றச்செயல்  நிகழ்ந்திருப்பது  தெளிவாக  தெரிகிறது  என்றாரவர்.

“எஸ்ஆர்சி  இண்டர்நேசனலிலிருந்து நஜிப்பின்  வங்கிக்  கணக்குக்குப்  பணம்  மாற்றிவிடப்பட்டிருப்பதாக  முன்னாள்  சட்டத்துறைத்  தலைவர் (அப்துல்  கனி  பட்டேல்)  என்னிடம்  தெரிவித்தார்.  அது  ஒரு  குற்றச்செயல்தான்  என்பதற்கான ஆதாரங்களையும்  காண்பித்தார்”, என  முகைதின் கூறினார்.