நாளை, மகாதிர், ஹராபான் கூட்டுச் செய்தியாளர் கூட்டம்

izzaமலேசிய  அரசியல்  வானம்  நாளொரு  மாற்றமும்  பொழுதொரு  வண்ணமும்  பெற்று  வருகிறது. ஆகக்  கடைசியாக  வந்துள்ள   செய்தி-  நாளை  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டும்  பக்கத்தான்  ஹராபானும்  கூட்டாக  செய்தியாளர்  கூட்டம்  நடத்தப்  போகிறார்களாம்.

இதைத்  தெரிவித்திருப்பவர்  அவரோ  இவரோ  அல்ல,  மகாதிரின்  ஜன்ம  பகைவராகக்  கருதப்படும்  அன்வார்  இப்ராகிமின்  புதல்வியும்  பிகேஆரின்  உதவித்  தலைவருமான  நூருல்  இஸ்ஸா  அன்வார்.

“ஆம்.  நாளை  பிற்பகல்  மணி  3.30-க்கு துன்  மகாதிருடன்  சேர்ந்து  செய்தியாளர்  கூட்டம்  நடத்தப்  போகிறோம்.

“அதில்  எல்லா  விவரங்களும்  வழங்கப்படும்”, என்றாரவர்.