பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பாணியில் ஆட்சி நடக்கும் வரையில் உலகில் அதற்கு உரிய அங்கீகாரம் மலேசியாவுக்குக் கிடைக்கப்போவதில்லை என உலகப் புகழ்பெற்ற வாராந்திர சஞ்சிகையான தி எக்கோனமிஸ்ட் கூறுகிறது.
நேற்று அதில் வெளியிடப்பட்டிருந்த கட்டுரை ஒன்று, அம்னோவிடம் கருத்துப் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என்றும் கட்சித் தலைவரின் நேர்மையே கேள்விக்குரியதாக மாறியிருப்பதால் அது புத்துயிர் பெறும் வாய்ப்பே இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தது.

























