முக்ரிஸ்: நஜிப் தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் கெடாவை பிஎன் இழக்கும்

kedநஜிப்  அப்துல்  ரசாக்  தொடர்ந்து  அம்னோ  தலைவராகவும்  பிரதமராகவும்  இருந்தால்  அடுத்த  பொதுத்  தேர்தல்  கெடாவை   பிஎன்  இழக்க  நேரும்  என  முன்னாள்  கெடா  மந்திரி  புசார்  முக்ரிஸ்  மகாதிர்  கூறினார்.

“அவர்  தொடர்ந்து  கட்சித்  தலைவராக  இருந்தால்  14-வது  பொதுத்  தேர்தலில்  (கெடாவில்)  வெற்றி  பெறுவோம்  என்ற  நம்பிக்கை  எனக்கில்லை”, என்றவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

கெடாவில்  பிஎன்  வெற்றிபெற  நஜிப்  இரண்டு  பதவிகளையும்  விட்டு  வெளியேற  வேண்டும். பெக்கான்  எம்பி  அதிகாரத்தில்  உள்ளவரை  அம்னோ  இழந்த  செல்வாக்கைத்  திரும்பப்  பெறாது  என  முக்ரிஸ்  கூறினார்.