மலேசியாவை காப்பாற்ற வேண்டுமானால் முதலில் நஜிப் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய 37 பத்திகளைக் கொண்ட ஒரு பிரகடனம் முக்கிய அரசியல் தலைவர்கள் வழி வெளியிடப்பட்டது. இதற்கு மூலகாரணமாக இருந்தவர் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஆவார்.
இன்று பிற்பகல் நான்கு மணியளவில் மலாயா பல்கலைகழக முன்னாள் மாணவர் சங்க கிளப் ஹவுஸ் வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டது. இதில் முன்னாள் துணைப் பிரதமரும் அம்னோவின் முன்னாள் துணைத் தலைவருமான முகிடின் யாசின், மூத்த மசீச முன்னாள் தலைவர் லீ லியோங் சிக், முன்னாள் கெடா மந்திரி புசார் முக்ரிஸ், சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி உட்பட சுமார் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தப் பிரகடனத்தின் முக்கிய சாரம் இரண்டாகும்:
முதலாவதாக, 1எம்டிபியின் ஊழல். இது எவ்வாறு உருவானது; அதில் எவ்வளவு பணத்தை முதலீடு செய்தார்கள்; அவை என்ன ஆனது என்பவை விவரிக்கப்பட்டன. இது முழுமையாக நஜிப் தனது பண அரசியலை நடத்தப் பயன் படுத்தப்பட்டது என்றும், அதன் பயனாக ரிம42 பில்லியனை கடனாகப் பெற்று பல திட்டங்களின் வழி பட்டுவாடா செய்த நஜிப் தனது வங்கிக் கணக்கிலும் பணத்தை கையாண்டார் என்பதாகும்.
இரண்டாவது, இந்த ஊழல் சார்பாக கேள்விகள் கேட்கும் எவரையும் அடக்கவும் ஒடுக்கவும் அரசாங்க அமைப்பு முறைகள் பயன்படுத்தப்பட்டதாகும். புலனாய்வுத்துறை, அட்டார்னி ஜெனரல் அலுவலகம், காவல்துறை, இலஞ்ச ஒழிப்பு இலாக்கா, மத்திய வங்கி போன்றவை பிரதமரின் கட்டுப்பாட்டுக்குள் இயங்குவதால், இவற்றை நஜிப் பயன்படுத்திக்கொண்டு நாட்டின் நிலைத்தன்மையை புரையோடச் செய்துள்ளார் என்பதாகும்.
இதற்கு தீர்வாக இரண்டு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன:
முதலாவது, நஜிப் பதவி விலக வேண்டும். இதை அரசமைப்புக்கும், நாட்டின் சட்ட திட்டங்களுக்கும் உட்பட்ட வகையில் நிறைவேற்ற வேண்டுவதாகும்.
இரண்டாவதாக, புரையோடிப்போயிருக்கும் அரசாங்க அமைப்பு முறைகளை மீட்டெடுப்பதாகும். அதோடு அதில் தொடர்ந்து குற்றம் செய்பவர்களைத் தண்டிப்பதாகும்.
அரங்கம் நிறைய செய்தியாளர்கள் இருந்தனர். அவர்களுக்கு பதில் அளித்த பல அரசியல் தலைவர்கள், இந்தப் பிரகடனத்தின் வழி மக்கள்தான் மாற்றத்தை கொண்டு வர இயலும் என்றனர். அதனால்தான் இதை மக்கள் பிரகடனம் என்றழைக்கிறோம் என்றனர்.
இதில் கலந்து கொண்டவர்களில் அம்பிகா சீனிவாசன், பெர்சே அமைப்பின் தலைவர் மரியா சின் அப்துல்லா, பாஸ் கட்சியின் மாபுஸ் ஒமார்,அமனாவின் மாட் சாபு, முஸ்தபா முகமாட், முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம், பிகேஆர் கட்சியின் ரபிசி ரம்லி, முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் முகமட் தாயிப் ஆகியோரும் இருந்தனர்.
முன்னாள் நிதியமைச்சர் டைம் சைுனுடின், முன்னாள் அமைச்சர் ஸாபி அப்டால், முன்னாள் போலீஸ் படைத் தலைவர் ஜமான் கான் ஆகியோரும் ஆதரவு கொடுத்துள்ளதாக நிகழ்ச்சி வழிநடத்துனர் சைட் சாடிக் தெரிவித்தார்.
‘இந்த மாறுபட்ட ஒன்றுகூடல் மலேசியாவின் எதிர்காலத்தை காப்பற்ற வழி வகுக்கும் என்ற நம்பிக்கையை தாம் கொண்டுள்ளதாக’ அன்வார் இப்ராகிம் வெளியிட்டதாக ஓர் அறிக்கை கூறுகிறது.
இதில் பார்வையாளராகக் கலந்து கொண்ட சுவராம் மனித உரிமைக் கழகத்தின் தலைவர் கா. ஆறுமுகம், இது ஒரு வரலாற்று திருப்புமுணை என்றார். அரசாங்க அமைப்பு முறைகளைக் கெடுத்தவரே மாகாதீர்தான். இன்று அவரே மாற்றம் வேண்டும் என்கிறார். அவருக்கு, நஜிப் பதவி விலக வேண்டும், ஆனால், மக்கள் மேம்பாடடைய கண்டிப்பாக அரசியல் மாற்றம் தேவை. அரசியல் இயந்திரங்களும் அமைப்பு முறைகளும் அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட வேண்டும். அவை பிரமரின் கீழ் இயங்கக்கூடாது. ஒரு முழுமையான தீர்வுக்கு முதல் கட்டம் நஜிப்பின் பதவி விலகல்தான். நஜிப் இருக்கும் வரை பிற மாற்றங்கள் வராது என்கிறார்.


























இது ஒரு மக்கள் பிரகடனம் என்பதைவிட ‘மகாதிர் பிரகடனம்’ என்பதே சரி. அரசாங்கம் செய்யும் ஊழல்களும், அதிகாரிகள் செய்யும் லஞ்ச லாவண்யங்களும் ஒழிய வேண்டும் என்பது எதிர்கட்சிகளின் கோரிக்கை. ஆனால், நஜிப் பதவி விலகவேண்டும் என்பது மகாதிரின் கோரிக்கை. நஜிப் பதவி இறங்கினால் மட்டும் ஊழல்கள் குறைந்துவிடுமா என்பதே நமது கேள்வி. பொறுத்திருந்து பார்ப்போம்.
அம்னோவை காரணம் காட்டி நஜிப் ஆளுகிறார் ..இவர்கள் எதை கரணம் காட்டி மாற்ற நினைக்கிறார்கள் ? பெங் நெகரா ஜெட்டி செய்த குழப்பத்தில் நாடே கதி கலங்கி நிற்பதை மகாதீர் மறந்து விட்டார். நஜிப் பாவம். உலக வங்கி கணக்கியல் கொமொர்சியல் கிரைம் தெரியாமல் மாட்டிக்கொண்டார்.
அரசியல் விளையாடிலும் ஆனாலும் பரவாஇல்லை நாட்டுபபற்று
இருக்கே ? பற்றா நல்ல பாம்புகளா ? எந்த புத்தில் என்ன பாம்பு என்று இதைதான் சொன்னார்களோ ?
காக அடாத அட்ட்டமா ?அந்த கடவுளுக்கு வெளிச்சம் .
என்ன செய்வது ! மகாதிர் அடித்த கரை பிடித்த ஆணியை அவரே பிடுங்க பார்கிறார் ! முடியும்மா என்பதுதான் கேள்வி ?
அல்தான் தூயா நாஜீபி எப்படி விலகுவான்–இவன்கள் தான் ஆட்சிக்கு வந்தது முதல் எல்லாவற்றையும் அனுபவித்துக்கொண்டிருக்கிரான்களே. இவன்கள் என்ன ஞானிகளா? குறைந்தது பெருந்தன்மை இருக்க வேண்டும்– மேற்கு நாடுகளில் இப்படியா குரங்கு பிடி பிடித்துக்கொண்டிருக்கிரான்கள்
இவன் என்ன வெயிலில் மண் வெட்டி பிடித்தா வேலை செய்கிறான்? அரைவேக்காடுகள்– சொகுசு வாழ்க்கை அனுபவித்த ஜென்மங்கள் எப்படி விலகுவான்? அதிலும் அதிகாரம் பதவி– மோகம் கொண்ட இவனும் இவனை போன்றோரும் எப்படி நியாயத்தைப்பற்றியும் மக்களின் கருத்து பற்றியும் கவலைப்பட போகிறான்?> இது கடந்த 58 ஆண்டுகளுக்கு நடந்து கொண்டுதானே இருக்கிறது- அதுவும் காகாதிமிர் வந்த பின் தானே இதுதானே வாழ்க்கை என்று ஆகி விட்டது.
திரு. சிங்கம் அவர்கள் கூறியது உண்மை. நஜிப் போனால் மட்டும் இந்த நாட்டின் நிலைமை மாறிவிடப் போவதில்லை. இந்த நாட்டின் சட்ட கட்டமைப்பு மாற வேண்டும். அரசாங்க பதவி பலம், அரசியல் பலம் பிரதமர் ஒருவரின் கையில் நிலை கொண்டிருந்தால் சர்வாதிகாரமே நிலைக்கும். நீடித்திருக்கும். நஜிப்பை நீக்க வேண்டும் என்று சொல்லும் எந்த ஒரு எதிர் அணியும், நாடு இந்த நிலைக்குச் சென்றதற்கு இந்த தவறான அரசியல் பதவி கட்டமைப்பே காரணம் என்று சொல்லாததேன்? ஒரு திருடன் போனாலும் அடுத்த திருடன் நிச்சயமாக முளைக்கப் போகின்றான். இத்தகைய அரசியல் கட்டமைப்பு அதற்கு கண்டிப்பாக வழி வகுக்கும். இதனை மாற்ற “மலாய்க்காரர் முதலில்” என்று கூறி வரும் அமீனோ அரசாங்கம் முன் வராது. ஆக இவர்களை நம்பி காட்டாற்றில் இறங்க வேண்டிய அவசியம் நமக்கேன்? எதிர்கட்சிகளிடம் ஒரு புரிந்துணர்வும் ஒருமித்த கருத்தும் இல்லாத நிலையில் இருக்கும் அரசாங்கத்தை மாற்றி அரசியல் நிலைத்தன்மையைக் குலைத்தால் பின்னர் அவதிப் படப் போவது இந்நாட்டு மக்கள்தான். கண்ட கனவெல்லாம் கனவாகிப் போச்சுதடா என்ற நிலைதான் நமக்கு மிஞ்சும். ஈராக்கின் நிலையும் சிரியாவின் நிலையும் இதனை நமக்கு நன்றாகவே எடுத்துக் காட்டுகின்றது.
எங்கடா நீங்கலாம் ஒன்னு சேரமா போயிருவிங்கலோன்னு நினைச்சன்! எங்கையோ கேட்ட மாதிரி இருக்குல்ல?
இந்த விசயத்திலாவது ஒன்று சேர்ந்தார்களே.கட்சி பேதம் பார்க்காமல்
நீர்முழ்கி கப்பல் வியாபாரத்தில் ஊழல்,
அல்தாந்துய கொலை, AM பேங்க் நிறுவனர் கொலை, DPP கெவின் மோரிஸ் கொலை, MH 370 இருந்த 249 உயிர்களை காணவில்லை, சபாவில் தீவிரவாத உடுருவல், முன்னாள் எதிர்க்கட்சி அரசியல் தலைவர் அன்வார் சிறையில் (மனித உரிமை போராட்டவாதி ஹிந்ட்ரப் உதயகுமார் அந்நியாயமாக சிறையிலிட பட்டது மறக்க முடியும்மா ?), தமிழர்களின் பேரை சொல்லி சொல்லி அரசாங்கத்திடம் கொள்ளை லாபம் தேட முயலும் மா இ கா ஒரு பக்கம், மத மாற்று விவரங்களில் நீதி துறையின் இயலாமை, நீதி துறையில் இருக்கும் ஓட்டையில் ஆஸ்திரேலயாவிற்கு சுற்றுலா செல்வது (சிருள்), பிறகு அங்கிருந்து பேட்டி குடுப்பது, போலிஸ் லஞ்ச ஒழிப்பு துறையை மிரட்டுவது, போலிஸ் சட்ட துறை தலைமையகத்தை மிரட்டுவது, மேலும் பண வீழ்ச்சி, இன்னும் சரியாக விளங்காத 1MBD விவகாரம், அரசாங்க கஜானா காலி, அந்நிய பிரஜைகளின் ஆக்கிரமிப்பு, கல்வி கொள்கைகளில் முடக்கு, GST என்னும் விலையெற்றம், மனித உரிமை மீறல், ஊழல்-அரசியல்வாதிகளின் அராஜகம், இன்னமும் சொல்லமுடியாத குழப்படிகள் ….. இதற்கும் மேல வீரம் வரவில்லை என்றால் புடைவையை வாங்கி கட்டி கொள்ள வேண்டியதுதான்…..
Mr.Dhilip 2! நம் நாட்டின் ஊழல்களை அருமையாக வரிசைபடுத்தி உள்ளீர்கள். நன்றி!
ஒன்றும் சொல்லுற மாரியில்லிங்க
திலிப் சரியான குற்ற பத்திரிக்கையை வாசித்து விட்டீர்கள்…! தீர்ப்பு எப்படி வருகின்றது பொறுத்திருந்து பார்ப்போம்.
நாட்டை ஆழ வாய்ப்பு கொடுத்தால் , நஜிப் வியாபாரத்தில் இறங்கிவிட்டார் , நல்லா இருந்த நாட்டை இப்படி அலங்கோல படுதிட்டெய்யா /? மக்களின் கஷ்டம் புத்ரா ஜெயாவுக்கு இன்னும் புரியவில்லை . அளவுக்கு மீறிய கஷ்டம் . சுக போகத்திற்காக மக்களை சுரண்டும் அரசாங்கம் .
திலிப் சரியான குற்ற பத்திரிக்கையை வாசித்து விட்டீர்கள் valthukal
இந்த நாட்டின் சட்ட கட்டமைப்பு மாற வேண்டும்.its very very important.
சொத்து குவிப்பு பேராசையில் இனவெறியை தூண்டி நாட்டை நாசப்படுத்திய பின்னடைவு காலபோக்கில் தலைவிரித்து ஆடுவதற்கு அடித்தளம் அமைத்த காக்காதிர் தற்போது நடக்கும் அரசியல் சீற்றத்தில் மூழ்காமல் இருக்கவும்,இழந்த தன் செல்வாக்கை மீண்டும் நிலை நிறுத்தவும் இந்த தற்காலிக குதிரை முட்டை கூட்டு! அன்று தன்
ஆட்சியை தற்காக்க கிழக்கு மலேசியா project ic யில் பல லட்ச இந்தோனேசிய,பிலிப்பினோக்கள் நாட்டுக்குள் ஊடுருவிய பாதையே தீவிரவாதிகளுக்கும் வழி விட்டதை யாராலும் மறுக்க முடியமா? ஆனால் அதே காலகட்டத்தில் எம்மவர்கள் எண்ணிக்கையில் பல்லாயிரம் நிரந்தர குடியுரிமை இல்லாமலே இருந்ததை அரசு கண்டுக்கொள்ளாதது ஏனோ? அரசு குத்தகை அனைத்திலும் தன் குடும்பத்திக்கு சொத்து குவிப்பு! அரசு மற்றும் வெளி நாட்டு குத்தகைகள் தன் சொந்த நிறுவனங்களுக்கு திசை திருப்பியது! இப்படி ஏராளம் ஏராளம்! விவரிக்க நேரம் போதாது! இத்தகைய உயரிய பண்புகளை கொண்ட முன்னால் பிரதமர் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினால் நாடு என்னவாகும்??? அதற்காக தற்போது நடந்ததை எதையும் நான் நியாய படுத்தவில்லை! முதல் கோணல் முற்றிலும் கோணல்! இறுதியாக…என் பாட்டன் முப்பாட்டன் இம்மண்ணில் ஆண்ட ஆதாரங்களை அழிக்க முயன்ற காக்கா இனம் எப்படி எம்மக்களை வாழ விடும்???
இடி அவர்களே, உங்களுக்கு ஒன்று விளங்கவில்லை என்பது புரிகிறது. பிரிட்டிஷ் அரசாங்கம், மலாயா நாட்டிற்கு வரவழைக்க பட்டனர். இது நடந்த வருடம் 1929. இதன் பெயர் பங்கோர் ஒப்பந்தம். அப்பொழுது, பேராக் சுல்தான் அப்துல்லாவை தீர்த்துகட்ட சதி தீட்டியது, இந்த 04 மற்றும் 08 என்கிற பணக்கார சீனர்களின் இயக்கங்கள்; அவர்களுக்கு தமிழர்களின் ஆதரவு இருந்தது- அப்பொழுது.
அந்த ஒப்பந்தத்தில் பிரிடிஷார் இஸ்லாமிய மதத்தில் குறிக்கிட முடியாதபடி, ஆனால் ஆட்சியில் பங்கு கொள்ளலாம் என்றிருக்கிறது. இந்த இயக்கங்கள் (04, 08) இன்றும் குண்டர் கும்பல் என்ற பெயரில் பேராக்கில் இருக்கிறது; இதன் மீது போர் என்று சமிபத்தில் புத்ராஜெயா அறிவித்திருந்தது. எனவே, 1957 பிரிட்டிஷ் இந்த நாட்டில் இருந்து வெளியேறும் பொழுது, மண்ணின் மைந்தர்கள் “BUMIPUTRA” என்றும், நாட்டின் குடியுரிமை பெட்ரவர்கள் “WARGANEGARA” என்றும், பிரித்தளித்து விட்டு சென்று விட்டனர். பிறகு, 1963 சிங்கபூர் இந்த அமைப்பில் இருந்து விலகிய பொழுது, இந்த அரசியல் அமைப்பு உடைந்தது. மீண்டும், மாஹதிர் அதை திருத்தி அமைத்தார். அதற்க்கு, பார்லிமெண்டில் 2/3 பெற்றதனால் மீண்டும் சட்டம் திருத்தி அமைக்க பட்டது. நாளைக்கு, இந்தியர்கள் இந்த நாட்டை விட்டு வெறியேற வேண்டும் என்று பார்லிமெண்டில் 2/3 பெற்றால்; அல்லது அந்நியர்களுக்கும் IC தரவேண்டும் என்று பார்லிமெண்டில் 2/3 பெற்றால், நாம் ஒன்றும் செய்ய முடியாது. இப்படிதான் ஹிட்லர் செய்தார் JEWS சை.
Dhilip 2 அவர்களே பூமி புத்ரா என்பது துங்குவினால் ஆரம்பிக்கப்பட்டது– ஆங்கிலேயர்களால் அல்ல.
1957 லில் உருவானா மலேசியா அரசியல் அமைப்பு சாசனத்தில் ஒரு இடத்திலாவது india அல்லது china என்று இருக்கிறதா என்று பாருங்கள் ?
http://unmis.unmissions.org/Portals/UNMIS/Constitution-making%20Symposium/Federal%20Constitution%20of%20Malaysia.pdf
பல முறை 2/3 பெரும்பான்மையை கொண்டு அரசியல் சாசனம் மற்ற படிருக்கிறது…..மகாதிர் காலத்தில் ….. எனவே எங்கேயும் india அல்லது china என்று எழுதிருக்க வில்லை. இஸ்லாம் அல்லது அல்லது நான் இஸ்லாம் பரவலாக உள்ளது…. மாற்றி அமைத்த சாசனம் செல்லுபடியாகும்……
திலிப்,1820 இங்கு ஈயம் சுரங்கத் தொழில் மற்றும் 1872 இல் ரப்பர் தோட்டங்கள் இங்கு ஆரம்பித்தது எந்த நாட்டவர் என்று கூற முடியுமா? நான் history இலே கொஞ்சம் வீக்கு.அப்புறம்…என்னுடைய தாக்குதல்கள் எல்லாம் மஞ்ச துணி திருட்டு காக்காவை நோக்கிதான் இருக்கும்! ஏனா அவனாலே பாதிக்க பட்டவர்களில் நானும் ஒருவன்…
இடி அவர்களே, 7 ஆம் நூற்றாண்டில் விஜயன் என்ற இந்திய அரசன் கடாரத்தில் இருந்து, ஜவாவரை தன் கோடியை நாட்டி, புத்தமதத்தை பரப்பினான். பின் 10 ஆம் நூற்றாண்டில் ராஜா ராஜா சோழன் படை எடுத்து, எல்லாவட்ரையையும் சைவ மற்றும் சாக்தக வழிப்பாட்டினை செய்து முடித்தார். நாட்டை கலிங்கத்து அரசனிடம் ஒப்படைத்து சென்றார். ஆனால் 14 ஆம் நூற்றாண்டில் மஜாபஹிட் அரசாங்கம், காளிங்கனை காலி செய்து, இஸ்லாமிய ஆட்சியை கொண்டு வந்து, இன்றும் அதன் ஆட்சியில் தான் உள்ளோம். 18 ஆம் நூற்றாண்டில், பிரிட்டிஷ் ராஜ், 100,000 இந்திய தொழிலாளர்களை மலையா விற்கு கொண்டு வந்தனர் … இங்கிருதே தமிழர்களின் மலாய பயணம் வரையறுக்க படுகின்றது…. தாங்கள் கூரும் timber giants , சீனர்களே ….