மலேசிய ஜனநாயகத்தின்மீது ஐநாவின் கவலை ஆதாரமற்றது, புத்ரா ஜெயா

unமலேசிய  ஜனநாயகம்  குறித்தும்  முன்னாள்  எதிரணித்  தலைவர்   அன்வார்  இப்ராகிம்  சிறையிடப்பட்டது  குறித்தும்  ஐநா   கவலை  தெரிவித்திருப்பது   தேவையற்றது  எனக்  குறிப்பிட்டிருக்கும்  புத்ரா  ஜெயா,  ஐநா  கவலைகொள்ள  எந்தக்  காரணமுமில்லை  என்றது.

வியாழக்கிழமை  ஜினிவாவில்  ஐநா  மனித  உரிமை  மன்றத்தில்  ஐநா  மனித  உரிமை  உயர்  ஆணையர்  ஸைட்  ரா’ஆட் அல்  ஹுசேன்  ஆண்டறிக்கை  தாக்கல்  செய்தபோது மலேசியாவில்  ஜனநாயகத்தின்  நிலை  குறித்தும்  அன்வார்  இப்ராகிம்  குறித்தும்  கவலை  தெரிவித்திருந்தார்.

“ஐநா  உயர்  ஆணையரின்  கருத்து  ஆதாரமற்றது என்பதையும்   ஒரு  தரப்பு  தகவலை  மட்டுமே  அடிப்படையாக  வைத்துச்  சொல்லப்பட்டிருக்கிறது  என்பதையும்  மலேசிய  அரசாங்கம் வருத்தத்துடன்  கூறிக்கொள்கிறது”, என்று  வெளியுறவு  அமைச்சு  அறிக்கை  வெளியிட்டுள்ளது.

அன்வார்  அரசியல்   கைதி  அல்ல  என்றும்  மலேசியாவில்  ஜனநாயகம்  நன்றாகத்தான்  உள்ளது  என்றும் அது  குறிப்பிட்டது.