பெர்சேயில் கருத்து மாறுபாடு கொண்டோர் உண்டு ஆனால் பெரும்பான்மையினர் மரியாவை ஆதரிக்கிறார்கள்

chinகுடிமக்கள்  பிரகடனம்  குறித்து  பெர்சேயில்   இடம்பெற்றிருக்கும்  அமைப்புகள்  சில  மாறுபட்ட  கருத்து  கொண்டிருப்பதை  பெர்சே  இயக்கக்  குழு   அறிந்தே  உள்ளது.  ஆனாலும்,  பெரும்பான்மை  உறுப்பினர்கள்  அதன்  தலைவர்  மரியா  சின்  அப்துல்லா  பிரகடனத்தில்  கையெழுத்திட்டதை  வரவேற்கிறார்கள்  என்று  அது  கூறியது.

“மகாதிரின்  முன்னெடுப்பில்  உருவான  ஒரு  பிரகடனத்தில்  மரியா  கையொப்பமிட்டது  சில  என்ஜிஓ-களுக்குப்  பிடிக்கவில்லைதான்.

“ஆனால்,  பெரும்பான்மை  என்ஜிஓ-கள்  மரியாவுக்கு  ஆதரவாக  இருக்கின்றன.

“கருத்து  வேறுபாடு  கொள்ள  மக்களுக்குள்ள  உரிமையை  மதிப்பதுபோல்  குடிமக்கள்  பிரகடனத்தில்  கையெழுத்திட  மரியாவும்  மற்றவர்கள்  செய்த  முடிவையும்  மதிக்கத்தான்  வேண்டும்”, என  அக்குழு  இன்று  ஓர்  அறிக்கையில்  கூறியது.

பெர்சேயில்  இடம்பெற்றுள்ள  Mama Bersih, Johor Yellow Flame,  Sunflower Electoral Education  ஆகிய  மூன்று  அமைப்புகளும்  மரியா  பிரகடனத்தில்  கையெழுத்திட்டதற்கு  எதிர்ப்புத்  தெரிவித்தன..

“செய்த  தவறுகளுக்காகக்  கொஞ்சமும்  வருந்தாத  ஜனநாயகத்தின்  எதிரி”  என்று  மகாதிரை  வருணித்த  அவை,  அவருடன்  சேர்ந்து  பணியாற்ற  மரியா  முடிவெடுத்ததைக்  கண்டித்தன.