ஹிஷாமுடின்: மார்ச் 27 கூட்டத்தால் எதுவும் நடக்காது

hishமார்ச்  27-இல்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  எதிராக  நடைபெறவுள்ள  கூட்டத்தால்  எந்த  மாற்றமும்  நிகழப்போவதில்லை  எனத்  தற்காப்பு  அமைச்சர்  ஹிஷாமுடின்  உசேன்  கூறினார்.

இதற்குமுன்  எத்தனையோ  பேரணிகளும்  இயக்கங்களும்  இப்படித்தான்  நடந்து  முடிந்துள்ளன  என்றாரவர்.

“எத்தனை  பேரணிகள், ஆருடங்கள்,  கடந்த  ஆண்டில்  மட்டும்.

“நம்பிக்கையில்லாத்  தீர்மானம்  பற்றிக்  கூறினார்கள்,  2016 பட்ஜெட்  அங்கீகரிக்கப்படாது,  அம்னோ  பேரவை அமளியில்  முடியும்  என்றார்கள்…. எதுவும்  நடக்கவில்லை”, என  இன்று  நாடாளுமன்ற  வளாகத்தில்  செய்தியாளர்களிடம்  ஹிஷாமுடின்  கூறினார்.

மார்ச்  27  கூட்டத்தை,  மலேசியாவைப்  பாதுகாக்கும்  இயக்கத்தின்  ஒரு  பகுதியாக முன்னாள்  அமைச்சர்  ஜைட்  இப்ராகிம்  ஏற்பாடு  செய்திருக்கிறார். அதில்,  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  உள்பட  நஜிப்பின்  எதிரிகள்  பலர்  கலந்து  கொள்கிறார்கள்.