கடந்த ஐந்தாண்டுகளில் 2015-இல்தான் மிக அதிகமான தொழிலாளர்கள் ஆள்குறைப்பு செய்யப்பட்டார்கள் என மனிதவள அமைச்சர் ரிச்சர்ட் ரியோட் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“கடந்த ஐந்தாண்டுகளை எடுத்துக் கொண்டால் 2015-இல்தான் ஆள்குறைப்பு அதிகம் நடந்துள்ளது. ஆனாலும் 2007, 2008, 2009 ஆகிய ஆண்டுகளுடன் ஒப்பிட்டால் எண்ணிக்கை குறைவுதான்”, என எழுத்துவழி அளித்த பதிலில் அமைச்சர் கூறினார்.
2015-இல் நிதி, காப்புறுதி, தகாபுல் துறைகளில்தான் அதிகமானோர் வேலைகளை இழந்துள்ளனர் என்றாரவர்.
மனிதவள அமைச்சர் நேரம் கிடைக்கும் போது சா ஆலாம் தொழிற்ப் பேட்டை பகுதிக்கு வந்து சென்றால் தெரியும் ஆழ்குறைப்பு நடந்து எத்துனை தொழிற்ச் சாலைகள் மூடிக் கிடக்கின்றன என்பது தெரியும்..?