சட்டவிரோத சிகரெட்டுகளினால் புகையிலை நிறுவனம் தொழிற்சாலையை மூடுகிறது

cigarசிகரெட்  தயாரிப்பு  நிறுவனமான  பிரிட்டிஷ் அமெரிக்கன்  டொபேக்கோ  பெட்டாலிங்  ஜெயாவில்  உள்ள  அதன்  தொழிற்சாலையை  மூடவுள்ளது.

அதன்  உற்பத்தி  படிப்படியாகக்  குறைக்கப்பட்டு  2017 இரண்டாம்  பாதி  ஆண்டில்  உற்பத்தி  முற்றாக  நிறுத்தப்படும்  என அந்நிறுவனம்  புர்சா  மலேசியாவுக்கு  நேற்று  தெரியப்படுத்தியது.

கள்ள  சிகரெட்டுகளின்  வரத்து  பெருகி  இருப்பது  இம்முடிவுக்கு  ஒரு  காரணம்  என்று  அது  கூறியது.

“உயர்ந்த  சுங்க வரிச்  சூழலால்   கள்ள  சிகெரெட்  வரத்து  அதிகரித்துள்ளது. சட்டப்பூர்வ  சிகரெட்டுகளின்  விற்பனை  குறைந்து  உற்பத்திச்  செலவு  கூடியுள்ளது”.