பிரதமருக்கு எதிராக நம்பிக்கை-இல்லாத் தீர்மானம் கொண்டு வருவீர்: மகாதிர்

letterஅம்னோ  உறுப்பினர்கள் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கை  வெளியேற்ற  தமக்கு  உதவ  வேண்டும்  என முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர்களுக்கு  எழுதிய  திறந்த  மடல்  ஒன்றில்  அவர்  இந்த  வேண்டுகோளை  விடுத்தார்.

“கட்சியையும்  நாட்டையும்  பாதுகாக்க  எனக்கு  உதவ  வேண்டும்  என்று  கட்சியின்  உண்மையான  போராட்டத்தில்  நம்பிக்கை  கொண்ட  அம்னோ  உறுப்பினர்களை  அழைக்கிறேன். எல்லா  கிளைக்  கூட்டங்களிலும்  கட்சித்  தலைவரும்  பிரதமருமான  நஜிப்புக்கு  எதிராக  நம்பிக்கை-இல்லாத்  தீர்மானம்  கொண்டு  வாருங்கள். கட்சித்  தேர்தலைத்  தள்ளிப்போடக்  கூடாது  இவ்வாண்டிலேயே  நடத்த  வேண்டும்  என்றும்  வலியுறுத்துங்கள்”, என  மகாதிர்  திறந்த  மடலில்  கேட்டுக்கொண்டார்.

14வது  பொதுத்  தேர்தல்வரை  காத்திருக்கக்  கூடாது. காத்திருந்தால்  நஜிப்பின்  தலைமையில்  செயல்படும்  அம்னோ  தோற்றுப்போகும். தோற்றுப்போனால்  அதை  மீண்டும்  உருவாக்க  முடியாது  என்றார்.