சிவப்புச் சட்டையினர் மகாதிர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்

demoசுமார்  500 ஆர்ப்பாட்டக்காரர்கள், சுங்கை  புசார்  அம்னோ  தலைவர்  ஜ்மால்  முகம்மட்  யூனுஸ்  தலைமையில்  கொளுத்தும்  வெய்யிலையையும்  பொருட்படுத்தாமல்  புத்ரா  ஜெயாவில்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டுக்கு  எதிராக  ஆர்ப்பட்டத்தில்  ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களில்  பெரும்பாலோர்  சிவப்புச்  சட்டை  அணிந்து  கைகளில்  மகாதிரைக்  குறைகூறும்  பதாதைகள்  ஏந்தியிருந்தனர்.

பதாதைகளில்  ஒன்று  மகாதிரை  டிஏபி-இன்  கருவி  எனக்  குற்றஞ்சாட்டியது.

ஆர்ப்பாட்டக்காரர்கள்  மகாதிரின்  அலுவலகம்  அமைந்துள்ள  பெர்டானா தலைமைத்துவ  அறநிறுவனக்  கட்டிடத்துக்கு     வெளியில்  கூடினர். அவர்கள்  உள்ளே  நுழைந்து  விடாமல்  கதவுகள்  சாத்தப்பட்டிருந்தன.

அருகில்  கலகத்  தடுப்புப்  போலீஸ்  அணி  ஒன்றும்  நிறுத்தி  வைக்கப்பட்டிருந்தது.