தகிக்கும் வெய்யில்; வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்வீர்

heஅனல்  காற்றுக்கு  போலீஸ் பயிற்சியாளர்  ஒருவர்  பலியானதை  அடுத்து  மக்கள்  வெளிப்புற  நடவடிக்கைகளைக்  குறைத்துக்  கொள்ள  வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. .

இம்மாதத்  தொடக்கத்திலிருந்து  தகிக்கும்  வெய்யிலால்  நான்கு  பேர்  பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்  என்றும்  ஒருவர்  உயிர்  இழந்தார்  என்றும்  சுகாதார  அமைச்சு  கூறியது.

புதன்கிழமை, ஜோகூரில்  போலீஸ்  பயிற்சியாளர்  அசிசான்  ஆயுப்,  அறிமுக நடப்பின்போது கடும்வெப்பம்  தாங்காமல்  இறந்தார்.

வெளிப்புற பயிற்சிகளைக்  குறைத்துக்கொள்ளும்படி  போலீசுக்கும்  இராணுவத்துக்கும்   ஆலோசனை  கூறப்பட்டுள்ளது.

வெப்பநில தொடர்ந்து  ஏழு  நாள்களுக்கு  40 செல்சியசுக்கும்  அதிகமாக  இருக்குமானால்  பள்ளிகளை  மூடுவது  உள்பட  பல  அவசரகால  நடவடிக்கைகள்  எடுக்கப்படும்  எனச்  சுற்றுச்சூழல்  அமைச்சர்  வான்  ஜுனாய்டி   துவாங்கு  ஜப்பார்  கூறினார்.

வாட்டி  வதைக்கும்  இந்த  அனல் காற்று  மாத இறுதிவரை  நீடிக்கும்  என்று  மலேசிய  வானிலை  ஆய்வுத்  துறை  அறிவித்துள்ளது.