ரிம100மில்லியன் ஊழல் தொடர்பில் கைதான மூத்த அரசாங்க அதிகாரி தம் அமைச்சைச் சேர்ந்தவர்தான் என்பதை கைரி ஜமாலுடின் உறுதிப்படுத்தினார்.
அவர்மீது விசாரணை நடந்து வருவதைச் சில வாரங்களுக்கு முன்பு மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி) தம்மிடம் தெரிவித்ததாக இளைஞர், விளையாட்டு அமைச்சர் கூறினார்.
அரசாங்கப் பணக் கையாடல் தொடர்பில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக எம்ஏசிசி மார்ச் 17-ல் அறிவித்திருந்தது. அவர்களில் ஒருவர் அரசு உயர் அதிகாரி என்றும் அவரே அக்கும்பலின் சூத்திரதாரி என்றும் அது குறிப்பிட்டது.
அந்த ஒன்பதின்மரும் அரசாங்கப் பணத்தைக் கையாடல் செய்த ஒரு கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.
அக்கும்பலின் 69 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.கார்கள், வீடுகள், நகைகள் கைப்பற்றப்பட்டன.
ரிம400,000 பெறுமதியுள்ள கடிகாரங்கள், ரிம600,000 மதிப்புள்ள கைப்பைகள் முதலியவை பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களில் அடங்கும்..
குறிப்பிட்ட சூத்துரதாரி முறைகேடாகப் பெற்ற பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார். அடிக்கடி குடும்பத்துடன் வெளிநாடுகளுக்குப் பறப்பாராம். முதல் வகுப்பில்தான் பயணம் செய்வாராம்.


























வேலியே பயிரை மேய்கிறது. உன் அமைச்சிலே இவ்வளவு ஓட்டை நீ அடுத்த அமைச்சி ஓட்டையை அல்லவே முழு நேரமும் அடைத்து கொண்டிருக்கிறாய். அறிக்கை விடுறது அலம்பல் பண்ணுறது …… !!!
அம்னோ ஆட்சி யில் இதெல்லாம் சாதாரணம்ப்பா.மேலிருந்து கீழ்வரை எல்லாம் ஊழல்தான்.நோக்கியன் எவனும் அரசியல் செய்ய வரமாட்டான்.
அம்னோ ஆட்சி யில் இதெல்லாம் சாதாரணம்ப்பா.மேலிருந்து கீழ்வரை எல்லாம் ஊழல்தான்யோக்கியன் எவனும் அரசியல் செய்ய வரமாட்டான்.
இதெல்லாம் பனிக்கட்டியின் நுனிதான்– அடியில் 2.6 பில்லியனை விட அதிகம்– 58 ஆண்டுகளாக அம்னோ அரசியல் வாதிகளும் அரசு உத்தியோகத்தில் உள்ளவர்களும்– அதுவும் 1981 க்கு பிறகு அரசு உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்ட்டம் — எல்லா உயர் பதவிகளும் அம்னோ குஞ்சுகளுக்கே — பணம் இவங்களின் கையில் தானே புழங்கியது– என்னுடைய 18000 ரிங்கிட்டை வருவாய் துறை ஈன ஜென்மங்கள் தின்று ஏப்பம் விட்டது. யாரிடம் முறையீடு பண்ண முடியும் -எல்லாமே இந்த நாதாரிகளின் கையில்.
அரசாங்க அதிகாரி முதல் வகுப்பில் அடிக்கடி வெளி நாடுகளுக்கு சுற்றுலா செல்வதை அரசாங்கம் கவனிக்காத , எப்படி பணம் வருகிறது என்று தெரிந்து விடுமே !! 100 மில்லியன் சாப்பிடும் வரை காத்திருந்தனரா !!!
இது என்ன 2MDB அ ?
இது ஆரம்பம் தான்…. இன்னும் வரும்….. வளரும்….
அவர் பெயர் தெரிந்தால் நாங்களும் சேர்ந்து நாரடிக்கலாமே!
இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இது எப்போதும் நடப்பது தானே?
அரசியல்ல இதெல்லாம் சகஜம்பா. கோடி கோடியாய் கொள்ளயடிதாலும் மக்களிடத்தில் நடிப்பதில் வல்லவர்கள் அரசியல்வாதிகள்.