மலாக்கா சட்டமன்றத்தின் முன்னாள் எதிரணித் தலைவர் கோ லியோங் சான் இப்போது சுயேச்சை உறுப்பினர் என சட்டமன்றத் தலைவர் ஒஸ்மான் முகம்மட் தெரிவித்தார்.
டுயோங் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான கோ முன்பு ஒரு டிஏபி பிரதிநிதி. இப்போது இல்லை. கட்சியை இழித்துரைத்ததற்காக அவர் ஒராண்டுக் காலம் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
அவருக்குப் பதிலாக ஆயர் குரோ சட்டமன்ற உறுப்பினர் கூ போய் தியோங் எதிரணியின் புதுத் தலைவர் என்றும் பண்டார் ஹிலிர் சட்டமன்ற உறுப்பினர் தே கொக் கியு எதிரணி தலைமை கொறடா என்றும் ஒஸ்மான் கூறினார்.
“இதன் தொடர்பில் டிஏபி தலைமைச் செயலாளரிடமிருந்து கடிதம் வந்தது”, என்றவர் கூறினார். மலாக்கா சட்டமன்றத்தின் தொடக்கவிழாவுக்குப் பின்னர் ஒஸ்மான் செய்தியாளர்களிடம் பேசினார்.
மலாக்கா டிஏபி பிளவுபட்டிருப்பதாகவும் அதில் ஒரு தரப்பு கோ-வை ஆதரிப்பதாகவும் மற்றொரு தரப்பு மத்திய டிஏபி தலைமையை ஆதரிப்பதாகவும் ஊடகச் செய்திகள் கூறுகின்றன..
– பெர்னாமா

























அப்பனும் மவனும், கட்சியில் புரியும் அட்டகாசங்களை எவ்வளவு நாளைக்குத்தான் பொறுத்துக் கொள்வது? கொஞ்சம் வாயைத் திறந்தார் இந்த கோ லியோங் சான். ‘தூக்கிட்டாங்கோ’ அப்பனும் மவனும்.
டி.எ.பி.யில் அப்பனும் மவனும் புரியும் சர்வாதிகாரங்களை, மற்றொரு டி.எ.பி.நாடாளுமன்ற உறுப்பினரான சிம் தொங் ஹிம் என்பவரும் வாயை திறந்தார். அவரையும் ‘தூக்கிட்டாங்கோ’ இந்த அப்பனும் மவனும். இந்த செய்தி நாளைக்கு [29-3-2016] பேப்பரில் வரும்.