பயணங்களைப் பகிர்ந்துகொள்ளும் சேவைக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமலிருப்பதை ஆட்சேபித்து சுமார் 300 டெக்சி ஓட்டுனர்கள் மேற்கொண்ட மறியல் போராட்டம் போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் விரைவிலேயே முடிவுக்கு வந்தது. ஆர்ப்பாட்டக்காரர்களில் மூவர் கைது செய்யப்பட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் நண்பகல் 12 மணிக்குள் கலைந்து செல்ல வேண்டும் என்று போலீசார் கெடு விதித்திருந்தார்கள். கெடு முடிவுக்கு வந்ததை அடுத்து அவர்கள் நடவடிக்கையில் இறங்கினர்.
டெக்சி ஓட்டுனர்களின் போராட்டம் காலை மணி 10க்குத் தொடங்கியது. அவர்கள் ஜாலான் புக்கிட் பிந்தாங்கில் பெவிலியன் மால் அருகில் டெக்சிகளைச் சாலை நெடுகிலும் நிறுத்தி வைத்தனர்.
நிலப் போக்குவரத்து ஆணையத்தின்மீதும் அதற்குத் தலைவராக உள்ள சைட் ஹமிட் அல்பார்மீதும் அவர்களுக்கு அதிருப்தி. அவரை அங்கிருந்து அகற்ற வேண்டுமென்பது அவர்களின் கோரிக்கை.
போராட்டத்தில் மேலும் டெக்சிகள் கலந்துகொள்வதைத் தடை செய்ய போலீசார் சுற்றியுள்ள பல சாலைகளை மூடிவிட்டனர்.


























இதைப் போன்ற துரித நடவடிக்கையை, இந்த போலீசார் சிவப்பு சட்டைக்காரர்கள் மீது காட்டாதது ஏன்? அவர்கள் மீது பயமா? அல்லது அந்த பேரணியில் போலீசாருக்கும் சம்பந்தம் உண்டா?
இலவச பஸ் சேவை இங்குள்ள வெளிநாட்டினர் தான் நல்ல அனுபவிக்கின்றனர் .aircond வசதியுடன் அதிலேயே சுற்றிக்கொண்டும் இருக்கின்றனர் ,இதல் நாலே டாக்சி ஓட்டுநர்களுக்கும் பலத்த அடி ??? இதில் போலீசார் மறியலை முறியடித்து பெரிய சாதனை புரிந்து விட்டனர் ,