பிரதமர் நஜிப்புக்குச் சொந்தமானது என்று கூறப்படும் அம்பேங் வங்கிக் கணக்கிலிருந்து மில்லியன்கணக்கான ரிங்கிட்கள் நகைகள், விடுமுறைகள், கார்கள் மற்றும் அரசியல் பரப்புரைகளுக்காகச் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா ஒலிபரப்பு நிலையம் (எபிசி) வெளியிட்ட அறிக்கையில் அம்பேங்கில் “Mr X” என்ற குறியீட்டுப் பெயரில் வைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட பணத்திற்கான விபரங்கள் கூறப்பட்டுள்ளன. அக்கணக்கு பிரதமர் நஜிப்புக்குச் சொந்தமானது என்று அது கூறிக்கொண்டுள்ளது.
வங்கிக் கணக்குகளை எபிசியின் ‘போர் கோர்னர்ஸ்’ செய்தியாளர்கள் பெற்றதாக அந்த எபிசி அறிக்கை கூறுகிறது. ஆனால், அவை எப்படி கிடைத்தன என்பது தெரிவிக்கப்படவில்லை.
செலவிடப்பட்ட விபரங்கள்:
நகைகள்: ரிம3.2 மில்லியன் (பிளேட்டினம் மற்றும் விசா கடன் அட்டைகள் வழியாக பணம் செலுத்தப்பட்டது.
அரசியல் பரப்புரைகள்: ரிம24 மில்லியன் சோலார் சயின் செண்ட். பெர்ஹாட்.டிற்கு கொடுக்கப்பட்டது.
ஊடக மற்றும் விளம்பரங்களுக்கு கொடுக்கப்பட்டது: தொகை வெளியிடப்படவில்லை.
சரவாக் எஸ்யுபிபி மற்றும் எல்டிபி ஆகிய கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டது. தொகை வெளியிடப்படவில்லை.
ராஹா அறவாரியம்: ரிம7.5 மில்லியன்.
தங்கும் விடுதிக்கான செலவு: ரிம395, 782.40 – ஷாங்ரிலா ஹோட்டல், கோலாலம்பூர்..
பொருள்கள் வாங்கியது: ரிம360,000 துணி விற்பனை சில்லறை வியாபார நிறுவனம் ஜேகல் டிரேடிங்கிற்கு கொடுக்கப்பட்டது.
விடுமுறை: ரிம178,000 சுற்றுப்பயண ஏஜென்சி டு ஒன் ஹோலிடேய்ஸ் மலேசியாவுக்கு கொடுக்கப்பட்டது.
சொகுசுக் கார்கள்: ரிம167,959.50 சொகுசுக் கார் விற்பனையாளர் – சிக்நேச்சர் எக்சோட்டிக் கார்கள் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது.
வணிகர்கள், கல்விமான்கள் மற்றும் வழக்குரைஞர்கள்: தொகை வெளியயிடப்படவில்லை.
இவற்றுக்கான எதிர்வினையைப் பெறுவதற்காக பிரதமர் அலுவலகம் மற்றும் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்துட்டன் மலேசியாகினி தொடர்பு கொண்டுள்ளது.


























இவருக்கு உடல் முழுவதும் மச்சம் இருக்கும் போல் தெரிகிறது ! இல்லையென்றால் இப்படி செலவு பண்ண யாரால் முடியும் ?
இவ்வளவையும் அந்த ‘MR. X’ நாட்டு நலனுக்காகச் செய்தார். இதை போய் பெரிய ஊழல் என்று சொல்லலாமா!
இவருக்கு சம்பளமே தேவையில்லையே. மக்கள் வரியும் நன்கொடைகளுமே அளவுக்கு அதிகமாக வந்து குவிகின்றன, ஆமாம் இவ்வளவு இருந்தும் கடைசியில் உடன் வரப்போவது ஆறு மீட்டர் வெள்ளை நிற துணிதான் என்பது இவர் அறியாதவரோ? வியர்வை சிந்தி உழைக்காமல் “வரும்” பணம் எல்லாம் ” ஹாராம்” அல்லவா?
எல்லாமே இன திமிரினால்– இன வெறி பிடித்த மலாய்க்காரன் /அம்னோ ஈன ஜென்மங்களின் ஆதரவில் இவன் திமிர் பிடித்து ஆடுகிறான். ஆட்டம் போட்ட எத்தனையோ பேர் மண்ணைகவ்வி விட்டனர்– என்ன இதில் பாதிக்கப்படுவது நாம் தான்– அவன் எல்லாவற்றையும் அனுபவித்து விட்டு அம்னோ அல்லாதவர் முகத்தில் குசுவிட்டு போய் விடுவான்– இவ்வுலகம் இவ்வளவு மட்டரகமாக போய் விட்டது. இது பல நாடுகளில் அதுவும் குறிப்பாக 3ம் உலக வழக்கமாக ஆகிவிட்டது. ஐக்கிய நாட்டு நிறுவனம் பேருக்கு மட்டுமே– ஒன்றுக்கும் கையால் ஆகாத வெத்து வேட்டு. எப்போது ஒரு சக்தி உள்ள ஐக்கிய நாட்டு நிறுவனம் நிருவப்படுகின்றதோ அன்றுதான் இவ்வுலகிற்கு விடிவு. இல்லாவிடில் எல்லாமே சிறுபிள்ளை விளையாடுவது போல் என்றுமே ஆகிவிடும்– நீ எனக்கு மிட்டாய் கொடுத்தால் நான் உன் கூட்டாளி – அப்படித்தானே நடக்கிறது–எவன் உண்மைக்காக உலக ஒற்றுமைக்காக ஒத்து உழைக்கிறான்? ஏட்டிக்குப்போட்டி- சுயநலம் தானே எங்கேயும்.