தங்களுடைய நடவடிக்கைகளில் போலீஸ் தலையிடுவதற்கு ஆட்சேபம் தெரிவிக்க கூடுமாறு மலேசிய வழக்குரைஞர் மன்றம் அதன் உறுப்பினர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
தங்களுடைய நான்கு உறுப்பினர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக வழக்குரைஞர் மன்ற அலுவலகம் மற்றும் பெடரல் போலீஸ் தலைமையகம், புக்கிட் அமான், ஆகிய இடங்களில் கூடுமாறு அச்சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் செயலாளர் கேரன் சியா யீ லின், வழக்குரைஞர்கள் சார்ல்ஸ் ஹெக்டர் பெர்ணான்டஸ், பிரான்சிஸ் பெரரா மற்றும் ஆர். சண்முகம் ஆகியோரே வாக்குமூலம் அளிப்பதற்காக போலீசாரால் அழைக்கப்பட்டுள்ள அந்த நான்கு உறுப்பினர்கள்.
நாளை பின்னேரத்தில் அவர்களுடைய வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்யவிருக்கின்றனர்.
கடந்த மார்ச் 19 இல், வழக்குரைஞர் மன்றத்தின் 70 ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் சட்டத்துறை தலைவர் ஏஜி) குறித்து தாக்கல் செய்யப்பட்ட முன்மொழிதல் பற்றி விசாரிப்பதற்காக போலீஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
போலீசாரின் இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்று மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் தலைவர் ஸ்டீவன் திரு கூறினார்.
போலீசாரின் இந்நடவடிக்கை வழக்குரைஞர் மன்றத்தின் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளில் போலீசார் தலையிடுவதாகும் என்றாரவர்.


























நம் நாட்டில் வழக்குரைஞர் தொழில், ஈ ஓட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. லாக்கப்ப்புகளில் சந்தேகப் பேர்வழிகளோ அல்லது குற்றவாளிகளோ அடைப்ப்படும்போது, அவர்களிடம் போதுமான அளவு லஞ்சம் பெற்று, வழக்கே இல்லாமல் செய்துவிடுகிறது இந்த போலீஸ் துறை. பெருமளவு வழக்குகள் போலீஸ் நிலையங்களிலேயே [லஞ்சம் வழி] தீர்க்கப்பட்டு விடுகின்றன. பெரும்பாலான வழக்குரைஞர்கள் வேலை இல்லாமல் அலைகிறார்கள். ஏதாவது அரசியல் கட்சிகளில் சேர்ந்து பிழைப்பை நடத்தப் பாருங்கள். இருக்கவே இருக்கு டி.எ.பி., பி.கே.ஆர்.
ஐயா சிங்கம் ! அதுக்கு நீங்கள் நேரடியாகவே ,வழக்கறிஞர் மன்றதுக்கு, அறிவுரை சொல்லலாமே ! புக்கிட் அமான் வெளியில் வழக்கறிஞர் மன்றத்தை செட்டல் செய்ய சொல்லுங்கள் ! சத்து மலேசிய சாத்தியமே !
வழக்குரைஞர்களே உங்களுடைய வாத திறமையால் குற்றவாலியை நிறபராதியாகவும் நிறபராதியை குற்றவாழியாகவும் தண்டனைபெருவார்கள் இதை உங்களிடம் கேட்டால் வழக்குரைஞர் தொழிலே இதெல்லாம் சகஜமப்பா என்று கூறுவீர்கள் அரசாங்கம் உங்கள் மேல் விசாரணை செய்வதும் சகஜமப்பா என்று எடுத்துகொல்லுங்கப்பா