அரசாங்கம் தேசியப் பள்ளிகளுக்கு வழிவிடும் நோக்கில் தாய்மொழிப் பள்ளிகளை மூட திட்டமிடவில்லை எனக் கல்வி அமைச்சர் மஹாட்சிர் காலிட் கூறினார்.
“கல்விச் சட்டம் பகுதி 28 தேசியப் பள்ளிகளுடன் தாய்மொழிப் பள்ளிகளும் கட்டப்பட வேண்டும், பராமரிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடுகிறது.
“ஆனால், மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்து ஈராண்டுகளுக்கு அந்நிலையில் மாற்றமில்லை என்றால் அமைச்சு அப்பள்ளிகள் செயல்படுவதை நிறுத்தி விடலாம்”, என்றாரவர்.
மக்களவையில் மார்க்கஸ் மொஜிகோ(பிஎன் – புடாடான்)வின் கேள்விக்குப் பதிலளித்தபோது மஹாட்சிர் இவ்வாறு கூறினார்.


























சாகடிக்க மாட்டோம் என்று சொல்லிக் கொண்டு சாகடிக்கும் செய்கையை நாங்கள் அறிவோம்.
தேர்தல் வரப்போகுது இல்லையா, இதுபோன்ற இனிய வாக்குறுதிகள் இனி வாரி வாரி வழங்கப்படும் என்பது எங்களுக்குத் தெரியாதா என்ன.
தாய் மொழி பள்ளிகளை மூடுவது என்று உங்களுக்கு எண்ணம் இருக்கவே கூடாது இருந்தால் அந்த என்னத்தை அடியோடு மறந்திடுங்க நம் பிரதமர் தாய் மொழி பள்ளிகளை மூடுவதாக ஒரு நாளும் கூறியதில்லை உங்களைபோன்ற அமைச்சர்கள்தான் இந்த மாதிரி அறிக்கை விட்டு மக்களின் மனதை புண்பட செய்கிறீர்கள் மூடுவதற்கு எவ்வளவோ இருக்கு முதல்ல அதை மூடுங்கள்
எவ்வளவு நாளைக்கு இப்படி சொல்லி சொல்லியே தமிழ் பள்ளிகூடங்களை அழிப்பிர்கள் ?
தாய் மொழிப் பள்ளிகளை மூட மாட்டோம் ஆனா மூடுவதர்க்கான வேலைகளை செய்துக் கொண்டுதான் இருப்போம்.
தாய்மொழிப் பள்ளிகளை மூடும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை
! ஆனால் மறைமுகமாக மூடுவதற்கு திட்டம் தீட்டுவோம் . வாய்ப்பு கிட்டும் போது மூடிவிடுவோம் ஹிஹிஹிஹி .